தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டு துறவிகள்

Go down

இரண்டு துறவிகள் Empty இரண்டு துறவிகள்

Post  ishwarya Thu Feb 14, 2013 3:58 pm

இரண்டு ஜென் துறவிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தனர். அங்கே ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவளால் ஆற்றை கடக்க முடியவில்லை. எனவே தன்னை தூக்கிக் கொண்டு போய் அக்கரையில் விடுமாறு கேட்டுக்கொண்டாள்.

ஒரு துறவி மறுத்து விட்டார். மற்றொரு துறவியோ அவளை தூக்கி கொண்டு போய் அக்கரையில் விட்டார். அந்த பெண் நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

துறவிகள் இருவரும் அமைதியாக நடந்து சென்றனர். முதல்துறவியால் பொறுக்க முடியவில்லை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தார். இருந்தாலும் மெதுவாக கேட்கத் தொடங்கினார்.

“துறவு வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் ஏறிட்டு கூட பார்க்கக் கூடாது என்பது நமது கொள்கை. ஆனால் நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டு தூக்கி அக்கரையில் சேர்த்தீர்கள்?” என்று கேட்டார் முதல் துறவி.

அதற்கு பதிலளித்த இரண்டாம் துறவியோ “நான் ஆற்றங்கரையிலே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீதான் இன்னமும் தூக்கி சுமந்து வருகிறாய்” என்றார்.

கருத்து: உடலால் செய்யும் பாவத்தை விட மனதால் செய்யும் பாவமே மிகக் கொடியது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு அம்மன் சன்னதிகள்
» பிரபலத்துக்காகத் துள்ளும் சில பௌத்த துறவிகள் போன்ற கலகக்காரர்கள் வேறு யாருமில்லை.! - மகிந்த யாப்பா
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» எல்லோருக்கும் இரண்டு தாய்
»  இங்கு எல்லாமே இரண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum