தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தன்னிச்சை மருத்துவத்தின் ஆபத்துகள்!

Go down

தன்னிச்சை மருத்துவத்தின் ஆபத்துகள்!  Empty தன்னிச்சை மருத்துவத்தின் ஆபத்துகள்!

Post  meenu Tue Feb 12, 2013 5:43 pm

மருத்துவர்களின் தடபுடலும், மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை செய்வதால் ஏற்படும் செலவுகளும் இன்று மட்டுமல்ல என்றுமே மக்களை அச்சுறுத்தி வரும் விஷயமாக இருந்து வந்திருக்கிறது. இதனால் வயிற்று வலியா, கால் வலியா, உடம்பு வலியா, காய்ச்சலா எதுவாக இருந்தாலும் நமக்கு தெரிந்த ஒரு சில மருந்துகளை வைத்துக் கொண்டு மருந்துக் கடைகளில் சென்று நேராக மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லி கேட்டு வாங்கி உட்கொள்கிறோம். இதுபோன்ற நடைமுறை மிகவும் ஆபத்தானது.

உதாரணமாக கிராமங்களில் உள்ள "குவாக்" என்று அழைக்கப்படும் போலி மருத்துவர்கள் "காசு குறைவாக" வாங்குவார்கள். ஆனால், நோய்க்கூறுகள் குறித்து எந்தவிதப் பயிற்சியும் இன்றி "அலோபதி" மருந்துகளையே கொடுப்பார்கள். இதில் பல போலி மருத்துவர்கள் மெடிக்கல் ஷாப் வேறு வைத்திருப்பார்கள். நகரங்களில் ஒழுங்காக உள்ள தகுதி வாய்ந்த டாக்டர்களை இம்மருந்துகளை பரிந்துரை செய்ய வைக்க முயன்று தோல்வியடைந்து வரும் சில மருந்து நிறுவனங்கள் கிராமங்களில் "தெய்வமாக" மதிக்கப்படும் இதுபோன்ற "மெடிக்கல் ஷாப்" முதலாளி-போலி டாக்டர் இணையை அணுக மருத்துவ பிரதிநிதிகளை அனுப்புவார்கள்.

இவர்களிடம் அம்மருத்துவர்கள் பேரம் பேசி 10 பாக்ஸ் மாத்திரைக்கு 5 பாக்ஸ், 6 பாக்ஸ் என்று ஃப்ரீ கேட்பார்கள். அதுவும் கொடுக்கப்படும். இதுபோன்று "ஃப்ரீ"க்காக கடையில் வாங்கிக் குவித்த மாத்திரைகளை தலையில் கட்ட அப்பாவி கிராம நோயாளிகள் இவரிடம் மாட்டுவார்கள். அவ்வளவுதான் வயிற்றுவலி என்றால் அது என்ன மாதிரியான வயிற்று வலி என்று பரிசோதனையெல்லாம் கிடையாது. உடனே "ரானிடிடின்" என்ற அல்சர் எதிர்ப்பு மாத்திரைகளை கொடுப்பார். பிறகு அந்த நோயாளி அந்த மருந்து அட்டையைக் காண்பித்தே வயிற்று வலி வரும் போதெல்லாம் பயன்படுத்துவார்.

இதுபோன்று 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் "ரானிடிடினை" இஷ்டத்திற்கு எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்? ஷ்டிடடiபேநச - நுடடளைiடிn ளுலனேசடிஅந என்று அழைக்கப்படும் அதி அமில சுரப்பும், கணைய செல்வீக்கம் என்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களையும் இது ஏற்படுத்தும். இந்த நிலையில் ஒரு நோயாளியை அழைத்து வரும் போது, நகர மருத்துவர்கள் கைவிடுவர். ஏனெனில் ஏகப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு கடைசியில் நோயாளிகளைக் காப்பாற்றத் தவறினார் என்ற கெட்ட பெயர் நமக்கெதற்கு என்றுதான்.

இது மட்டுமல்ல, சிலர் மளிகை சாமான்கள் போல் மருந்துகளை வாங்கி வைப்பார்கள். ஆண்டி பயாடிக் முதல் வலி நிவாரணிகள், அன்டாசிட், அல்சர் மருந்துகள் என்று பவுடர், தேங்காய் எண்ணெய் வாங்குவது போல் தீரத் தீர வாங்குவார்கள். அதாவது டாக்டருக்குத் தர வேண்டிய 50 %பாய் மிச்சம்தானே. இதுவே நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின் எண்ணம்.


ஆனால், இந்தப் பழக்கம் நமக்குநாமே குழி தோண்டிக் கொள்ளும் பழக்கம் ஆகும். அதுபோன்று பயன்படுத்தப்படும் "பெயின் கில்லர்கள்" பற்றி இப்போது பார்ப்போம் :

பெண்கள் பலர் உடம்பு வலி, மூட்டு வலிக்கு மாத்திரைகளை வாங்கி விழுங்கி வருகின்றனர், இதை விழுங்கினால்தான் வேலை செய்ய முடிகிறது என்கின்றனர்.

இதனால் உடனடி பாதிப்பு இல்லையெனினும், நாளடைவில் சிறுநீரகம் செயலிழக்கும் ஆபத்து இருக்கிறது. நமக்கு வயதாவது போலவே நம் சிறுநீரகத்திற்கும் வயதாகிறது. சிறு குழந்தைகள் போலவே 55 வயதுக்கு மேற்பட்டோருக்கும் சிறுநீரகத்தின் அளவு சிறியதாக இருக்கும்.

சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு வேலைகள் செய்யும் "நெஃப்ரான்"களின் எண்ணிக்கையும் 70,000 - 80,000 தான் இருக்கும். வளர்ந்த சராசரி மனிதனின் சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வலி நிவாரணி மாத்திரைகள் நம் ரத்தத்தில் கலக்கிறது. இந்த ரத்தம் நேராக சிறுநீரகம் வருகிறது. இந்த மாத்திரையோடு வரும் ரத்தத்தை சிறுநீரகம் வடிகட்டி உடலின் பிற பாகங்களுக்கு அனுப்புகிறது. ஏற்கனவே நெஃப்ரான்கள் குறைந்த அளவில் இருக்கும்போது, கூடுதலாக வடிகட்ட சிறுநீரகம் போராடும். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் சிறுநீரகத்தை கூடுதல் வேலை வாங்குகிறது இது.

மேலும் சிறுநீரகத்திற்குள் ரத்தத்தை பரவச் செய்யும் ப்ரோஸ்ட்டோ க்ளாண்டின் என்ற ஹார்மோனை இது மந்தப்படுத்துகிறது. இதனால் வடிகட்டும் வேலை செய்யும் நெஃப்ரான் முடிச்சுகளின் சில பகுதிகள் வேலை செய்யாமல் நின்றுவிடும். அதனால்தான் பெயின் கில்லர் மாத்திரையைச் சாப்பிட்டதும் வலியை மறப்பதால் தூக்கம் வருகிறது.

மூட்டுவலி, கை, கால் குடைச்சல், தலைவலி, வயிற்று வலி என்று எதற்கெடுத்தாலும் தானாகவே மாத்திரைகள் போடாமல் தகுந்த வைத்தியரை அணுகி வலி எதிர்ப்பு சக்தியை உடலின் செயல்பாட்டிலேயே வளர்க்கும் முறைகளை கடைபிடிப்பது நல்லது.

முதுகுவலி ஏற்பட்டால் அது "காஸ்ட்ரிக்" வலி என்று தெரியாமல் தசை-எலும்பு வலிக்குப் போடும் டைக்ளோஃபினாக் சோடியம், நியுமிசுலைடு, புரூஃபன் போன்ற மாத்திரைகளைப் போடுவது மேலும் வலியை அதிகரிக்கச் செய்யும் என்று பலருக்கும் தெரியாது. வலிகளில் பலவகை உண்டு. எல்லாவற்றிற்கும் மருந்துக் கடைகளில் நமக்குத் தெரிந்த பெயின் கில்லர்களை கேட்டு வாங்கி போட்டுக் கொள்வதென்பது விருதுப்பட்டி சனியனை விலை கொடுத்து வாங்கும் கதைதான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum