தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்லத்துக்கு பல் முளைக்கும் போது என்னலாம் நடக்கும் தெரியுமா!!!

Go down

செல்லத்துக்கு பல் முளைக்கும் போது என்னலாம் நடக்கும் தெரியுமா!!! Empty செல்லத்துக்கு பல் முளைக்கும் போது என்னலாம் நடக்கும் தெரியுமா!!!

Post  ishwarya Mon Feb 11, 2013 11:58 am

Baby Teeth
குழந்தை பிறந்த பின்னர் வளரும் போது, ஒவ்வொரு நிலையிலும் உடலில் ஒவ்வொரு வளர்ச்சி ஏற்படும். அந்த வளர்ச்சியில் ஒன்று தான் பற்கள். இந்த பற்கள் குழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்குப் பின்னர் முளைக்க தொடங்கும். அவ்வாறு முளைக்கும் போது குழந்தைகள் உடலில் திடீரென்று ஒருசில அதற்கான அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகள் ஏற்படும் போது, தாய்மார்கள் பயப்பட வேண்டாம். ஆகவே அந்த அறிகுறிகள் என்னவென்று குழந்தை நல மருத்துவர்கள் பட்டியலிடுவதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

* குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது, அவர்களது வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம்பிக்கும். அவ்வாறு ஏற்படும் போது அதனை அடிக்கடி துடைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த எச்சில் அவர்களது முகத்தில் நீண்ட நேரம் இருந்தாலோ அல்லது குழந்தையின் துணியில் இருந்தாலோ அவர்களுக்கு சளி அல்லது இருமல் போன்றவை ஏற்படும். ஆகவே துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும்.

* பற்கள் முளைப்பது போல் இருந்தால் குழந்தைகளுக்கு வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியால் குழந்தை அடிக்கடி அழத் தொடங்கும். அதுமட்டுமல்லாம என்ன தான் சமாதானப்படுத்தி குழந்தை அழுதாலும், அது குழந்தைக்கு பற்கள் முளைக்கும் நேரம் என்பதை அறியலாம். அப்போது குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணியை வாங்கி கொடுக்க வேண்டும்.

* எதையாவது குழந்தை அடிக்கடி வாயில் வைக்கும். அதுமட்டுமல்லாமல் கண்ணில் படும் அனைத்துப் பொருட்களையும் வாயில் வைக்கும். ஏனெனில் பற்கள் முளைக்கும் போது ஈறுகளில் அரிப்பு மற்றும் தோலை துளைத்து பற்களை வருவதால் வாயில் வலி போன்றவை ஏற்படும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது தாய்க்கு பெரும் சிரமம் ஏற்படும்.

* வலியின் காரணமாக சில சமயங்களில் குழந்தை பால் குடிப்பதை கூட மறுக்கும். ஏனெனில் அந்த வலி குழந்தைக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்துவதால், அது பால் குடிப்பதை மறுக்கும்.

* சிலசமயங்களில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். பல் வளர்வதற்கு முன் குழந்தைகளுக்கு தண்ணீர் போன்று கழிவுகள் வெளியேறும். இவ்வாறு வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் வயிற்றுக்கோளாறுகள் இருந்தால் கூட இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.

* பற்கள் முளைக்கும் ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு தூக்கம் கூட வராது. பற்கள் முளைக்கும் போது ஏற்படும் வலி, குழந்தைகள் நிம்மதியாக தூங்கவிடாது. தூங்கும் போது புரண்டு புரண்டு படுக்கும். சொல்லப்போனால் நடு ராத்திரியில் கூட தூங்காமல் எழுந்து அழத் தொடங்கும்.

இவையெல்லாம் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் போது ஏற்படும் அறிகுறிகள் ஆகும். ஆகவே இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு வலி ஏற்படாமல், அதற்கான மருந்துகளை மருத்துவரை அணுகி முன்பே கொடுத்து, அவர்களை சந்தோஷமாக, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வளர்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum