தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கைமாறு கருதாமல் உதவுங்கள்

Go down

கைமாறு கருதாமல் உதவுங்கள் Empty கைமாறு கருதாமல் உதவுங்கள்

Post  birundha Sun Feb 10, 2013 9:35 pm

* வைரம் போல பலம் படைத்தவர்களாகவும், பறவைகளைப் போல சுதந்திரம் கொண்டவர் களாகவும், சிங்கத்தைப் போல தைரியம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும்.
* மனதை ஒருமுகப்படுத்தினால் உடல்நலம் மேம்பாடு பெறும். நோய்களைப் போக்கி, உடலை பலமிக்கதாக்க மனஉறுதி ஒருவருக்கு அவசியம். மகிழ்ச்சி, உற்சாகம் கொண்டவர்கள் மன உறுதியை ஒருபோதும் இழப்பதில்லை.
* கைமாறு கருதாமல் பிறருக்கு எந்தவிதத்தில் உதவி செய்தாலும், கஷ்டங்களைப் போக்கி வழிகாட்டினாலும் அது தர்மம் தான். தர்ம சிந்தனை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய குணமாகும்.
* வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும் எங்கும், எதிலும், எப்போதும் ஒழுக்கமாய், நேர்மையாய் இருக்க வேண்டும். உண்மையாய் இருப்பது ஒன்றே தவங்களுக்கெல்லாம் மேலானதும், உயிரானதும் ஆகும்.
* எந்த விஷயத்தை அணுகினாலும் நன்மையும், தீமையும் இருக்கத்தான் செய்யும். ஆனால், நாம் தான் நம்முடைய அறிவினைப் பயன்படுத்தி துன்பத்தைப் போக்கி இன்பத்தை அனுபவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum