தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனித நெஞ்சங்களில் மறைந்த ஒளி

Go down

மனித நெஞ்சங்களில் மறைந்த ஒளி Empty மனித நெஞ்சங்களில் மறைந்த ஒளி

Post  birundha Sun Feb 10, 2013 8:51 pm

* கீழ்வானில் சூரியனின் ஜோதி உதித்தது. மலைகளின் மீது அவன் அருள்விழி பட்டது. கடலலைகள் அவனால் ஒளி பெற்றது. மலை,காடு என்று இப்பூமியெங்கும் ஒளி பரவியது. ஆனால், மனிதமனங்களில் மட்டுமே இருள் நிலவுகிறது.

* சூரியஜோதி என்னும் கரையற்ற வெள்ளம் திசை எட்டும் பாய்கிறது. மாசில்லாத அந்த ஒளி எல்லையற்ற அருளை எங்கும் பரப்பி நிற்கிறது. ஆனால், மனிதனின் நெஞ்சம் மட்டும் இருளில் குமைந்து கொண்டு கொடுமையைக் கொண்டாடுகிறது.
* தேன் சொட்டும் மலர்களின் ஊடே சூரியஜோதி அமுதம் போல பாய்கிறது. வானில் பாடும் பறவைப் புள்ளினங்கள் கதிரவனின் ஜோதியைக் கண்டு வாழ்த்திப் பாடுகின்றன. இந்த ஜோதியின் நல்லியல்புகளை நிலம், நீர், காற்று என்று எல்லாம் கொண்டி மகிழ்கின்றன. ஆனால், கீழ்மக்களின் நெஞ்சம் மட்டும் சிறுமையை நோக்கி செல்கிறது.
* நீர்ச்சுனைகள், நெடிய மலைகள் சூரிய ஒளியில் புன்னகை செய்து மகிழ்கின்றன. கரிய வானில் கருமேகங்கள் சூரியச்சுடரின் வரவு கண்டு கலைந்து வெண்மையாகின்றன. ஆனால், சாத்திரங்கள் பல கற்றும், தேர்ச்சி பெற்றும் மனித நெஞ்சங்கள் மட்டும் ஒளி பெறவில்லை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மறைந்த மோதிரம்
» புறாக்கள் மறைந்த இரவு
» இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட
» மறைந்த புதன் நிறைந்த கல்வி
» கடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum