தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரணி நகரை சுற்றிலும் 8 சப்தகன்னி கோவில்கள்

Go down

ஆரணி நகரை சுற்றிலும் 8 சப்தகன்னி கோவில்கள் Empty ஆரணி நகரை சுற்றிலும் 8 சப்தகன்னி கோவில்கள்

Post  amma Sun Jan 13, 2013 2:01 pm

ஆரணி நகரை சுற்றிலும் 8 திசைகளிலும் சப்த கன்னிகள் கோவிலாக குடிகொண்டுள்ளனர். எல்லைகளில் அமர்ந்து பக்தர்களை பாதுகாத்து வருகின்றனர். ஆரணி நகரில் புத்திகாமிடீஸ்வரர் கோவில் அருகில் சப்தகன்னிகள் கோவில் உள்ளது.

இதேபோல் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ அரியாத்தம்மன் கோவில், கமண்டல நாகநதி ஆற்றங்கரை அருகில் சப்தகன்னிகள் ஆலயம், ஆரணி வி.ஏ.கே நகரில் உள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோவில், கொசப்பளையம் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் எட்டியம்மன் கோவில் அருகிலும் அருணகிரி சத்திரம் பூந்தோட்டம் பகுதியிலும், பையூர் ஏரிகரையிலும் சப்தகன்னிகள் தேவதைகளாக குடிகொண்டுள்ளனர்.

இந்த கோவில்களில் சப்த மாதர்களுக்கு தினசரி வழிபாட்டு பூஜைகள் நடக்கிறது. இந்த கோவிலை குல தெய்வமாக வழிபடும் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விசேஷங்கள் நடைபெறுவதற்கு முன்பு இந்த வனதேவதைகளுக்கு சிறப்பு பூஜை செய்து குடும்ப நிகழ்ச்சிகளை சுபமாக முடிப்பார்கள்.

காளிகாம்பாள் கோவிலில் உள்ள வனதேவதைகளுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் ஞாயிற்றுகிழமை ராகு கால நேரத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum