தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதலில் உன்னை ஆராய்ந்து பார்

Go down

முதலில் உன்னை ஆராய்ந்து பார் Empty முதலில் உன்னை ஆராய்ந்து பார்

Post  birundha Sat Feb 09, 2013 3:26 pm

* கடவுளை நேராகப் பார்த்தவர்கள் இவ்வுலகில் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். ஒரு ஊருக்குப் போகாதவன், அந்த இடம் கிடையாது என்று சொல்ல முடியாது. கடவுள் என்பது அனுபவித்து உணர வேண்டிய அனுபவம்.
* பம்பரம் தானே ஆடுமா? அல்லது ஆட்டினால் ஆடுமா? பம்பரத்தைச் சாட்டை வைத்தே நாம் ஆட்டுகிறோம். ஆனால், இவ்வுலகமாகிய பம்பரத்தை சாட்டை இல்லாமலே ஆட்டுகிறான் இறைவன்.
* பானை செய்ய முதற்காரணம் மண்; அதை செய்ய காரணம் குயவன்; துணைக்காரணம் தண்டச்சக்கரம். அதுபோல உடலாகிய பானையை, சக்தியாகிய துணைக்காரணம் கொண்டு, பானை செய்ய காரணமாக இருக்கின்ற சிவபெருமான் மாயையைக் கொண்டு பானை செய்கிறார்.
* பானையைக் கண்டதும், அதைச் செய்த குயவனின் நினைவு வருவதைப்போல, உலகத்தைக் கண்டதும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் நினைவுக்கு வர வேண்டும்.


* அணுவை ஆராய்கிறான் மனிதன். வானமண்டலங்களை ஆராய்கிறான். சந்திரனை ஆராய்கிறான். ஆனால், தன்னை ஆராயவும் சிந்திக்கவும் மறுக்கிறான். நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நாம் பூமியில் பிறந்ததன் நோக்கம் என்ன என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் கடவுளைப் பற்றி ஞானம் வந்துவிடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum