தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யார் இந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள்

Go down

யார் இந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் Empty யார் இந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள்

Post  amma Sun Jan 13, 2013 1:34 pm

தமிழ்நாட்டு மக்கள் வாழ்வியல் துன்பங்கள் அனைத்தையும் போக்கி, சுபீட்சமான வாழ்வை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை புறநகரில் ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயத்தை ஆகம விதிகளுடன் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் யார்? அவரது அவதார நோக்கம் என்ன என்று தெரியுமா? அதை அறிந்தால் மெய் சிலிர்த்துப் போவீர்கள்!

ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் உண்மையான பெயர் சுப்பிரமணியபிள்ளை. கன்னியாகுமரி மாவட்டம நாகர்கோவிலில் கோட்டாறு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓடைத்தெருவில் அவர் பிறந்தார். பைரவமே அப்போது அவதாரம் எடுத்து இருப்பது யாருக்கும் தெரியாது.

ஏன்... பைரவ சித்தாந்தம் சுவாமிகளுக்கே தெரியாது. இவரது தந்தை பெயர் பெருமாள் பிள்ளை. தாய் வீரலெட்சுமி. இந்த தம்பதிகள் திருமணமாகி நீண்ட நாட்கள் கழித்து சுப்பிரமணிய பிள்ளை பிறந்தார். இவரது சிறு வயதில் தந்தையை இழந்தார். இதனால் சிறு வயதில் கூலி வேலை செய்தே வாழ்க்கையை நடத்தி வந்தார்.

நாகர்கோவிலில் இவரது வீட்டுக்கு எதிரில் மிகச் சிறிய கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் செங்கல்கள்தான் தெய்வீக பீடங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுடலை மாடன், பிரம்மசக்தி, பைரவர் ஆகியோருக்கு அந்த சிறிய கோவிலில் தனித்தனி பீடங்கள் இருந்தன. ஆனால் சுப்பிரமணியப் பிள்ளை அவற்றை அவ்வளவு சிரத்தையாக கண்டு கொள்ளவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அந்த கோவில் வழிபாடுகளில் கூட அவர் மனம் லயிக்கவில்லை. சுப்பிரமணிய பிள்ளைக்கு 25-வது வயதில் திருமணம் நடந்தது. அப்போது அவர் ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் மகா பைரவர் மெல்ல, மெல்ல சுப்பிரமணிய பிள்ளையை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருந்தார்.

சுப்பிரமணிய பிள்ளை எது சொன்னாலும், அது அப்படியே நூறு சதவீதம் பலித்தது. தொடக்க காலக்கட்டங்களில் அவர் சொல்வது பலிப்பதை யாரும் உணர்ந்து புரிந்து கொள்ளவில்லை. நாளாக, நாளாகத்தான் சுப்பிரமணிய பிள்ளைக்குள் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பத் தொடங்கினார்கள். அவர் குடும்பத்தினருக்கும் இது பற்றிற மெல்ல, மெல்ல தெரிய வந்தது.

நீங்கள் வாயைத் திறந்து எதுவும் சொல்லாதீர்கள் என்று சொன்னார்களேத் தவிர அவரை முழுமையாக நம்பவில்லை. இந்த சமயத்தில்தான் அவர் வீட்டையே உலுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது. சுப்பிரமணிய பிள்ளை மனைவியின் தங்கைக்கும், ஒரு ராணுவ வீரருக்கும் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும் புது மனைவியுடன் ராணுவ வீரர் தான் வேலை பார்க்கும் இடத்துக்கு புறப்பட்டார்.

அப்போது சுப்பிரமணிய பிள்ளை தன் மனைவியிடம், "இப்போது உன் தங்கை அந்த ராணுவ வீரனுடன் சென்றால் மரணம் அடைந்து விடுவாள்'' என்றார். இதை கேட்டதும் அவர் மனைவிக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது. "சும்மா இருங்கள்'' என்று சுப்பிரமணிய பிள்ளை பேச்சை தட்டி விட்டு, தன் தங்கையை அந்த ராணுவ வீரருடன் அனுப்பி வைத்தார்.

ஆனால் சில தினங்களில் அந்த புதுப்பெண், சுப்பிரமணிய பிள்ளை சொன்னது போலவே மரணம் அடைந்தார். எல்லாரும் ஆடிப் போய் விட்டனர். சுப்பிரமணிய பிள்ளையை பார்த்து பயந்தனர். இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம், சுப்பிரமணிய பிள்ளை ஜவுளி கடை வேலையில் இருந்து விலகி நிதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.

பிறகு அவர் சொந்தமாக "தேவி பைனான்ஸ்'' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். நிதி நிறுவனம் சிறப்பாக நடந்ததால் தோவாளையில் புதிதாக வீடு கட்டினார். அவருக்கு சுமார் 40 வயதான போது, ஒருநாள் ஆவணி திருவிழா வந்தது. சுப்பிரமணிய பிள்ளை வீடு எதிரே இருந்த கோவிலை கட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.

அவர்கள் சுப்பிரமணிய பிள்ளையை அணுகி, "பைரவருக்கு சிலை செய்து தாருங்கள்'' என்று கேட்டனர். அதற்கு சுப்பிரமணிய பிள்ளை, "பைரவரா... பைரவர் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. சுடலை மாடனுக்கும், பிரம்மசக்திக்கும் சிலை செய்து தந்து விடுகிறேன்'' என்றார். அதன்படி 2 சிலை செய்து கொடுத்தார். பைரவர் பற்றி அவர் நினைக்கவில்லை. சுத்தமாக மறந்து விட்டார்.

கோவில் திருவிழா தினம் வந்தது. மேளதாளம், மந்திரங்கள் முழங்க பூஜை நடந்து கொண்டிருந்தது. வெள்ளை வேட்டி, சட்டை சகிதம் சுப்பிரமணிய பிள்ளை அங்கும் இங்குமாக ஓடியாடி கோவில் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஊரே கோவில் முன்பு திரண்டிருந்தது. முக்கிய பூஜை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று சுப்பிரமணிய பிள்ளை மீது அருள் வந்தது.

கோவிலுக்கு உள்ளே சென்று துடிப்பாக ஆடிய அவர், "நான்தான் பைரவர் வந்திருக்கிறேன்'' என்று சொல்லி ஆடினார். ஊரார் மத்தியில் இன்ப அதிர்ச்சி. சுப்பிரமணிய பிள்ளை குடும்பத்திலோ பயங்கர அதிர்ச்சி. 25-10-2004-ம் ஆண்டு இந்த அற்புதம் நிகழ்ந்தது. அன்று முதல் கோட்டாறு பகுதி மக்கள் இவரை பைரவரின் அவதாரமாகவே பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஆனால் சுப்பிரமணிய பிள்ளைக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ சாமி ஆடுவதில் இஷ்டமே இல்லை. "இனி சாமி ஆடக் கூடாது'' என்று சுப்பிரமணிய பிள்ளை மனதுக்குள் வைரக்கியத்தை வளர்த்தார். ஆனால் பைரவர் எளிதில் விட்டு விடுவாரா என்ன? சுப்பிரமணிய பிள்ளை உடலை ஆட்கொண்ட பைரவர், அவர் வாயினாலே சித்தாந்த வாக்குகள் சொல்ல பயன்படுத்தினார் என்றாலும் சுப்பிரமாணிய பிள்ளைக்கு பைரவரை ஏற்க மனம் வரவில்லை.

இதன் காரணமாக சுப்பிரமணிய பிள்ளை தொழிலை இழந்தார். தன் தாய் வழி குடும்பத்தை இழந்தார். இவை அனைத்தும் பைரவர் போட்ட அறிவு சூடு. ஆனாலும் சுப்பிரமணிய பிள்ளைக்கோ அவர் மனைவிக்கோ பைரவர் அருள் வருவது பிடிக்கவில்லை. பைரவரை நினைத்து பயந்தனர். எனவே கணவனும், மனைவியும் சேர்ந்து பைரவர் மீண்டும் உடலுக்குள் வருவதை தடுக்க பெரிய போராட்டமே நடத்தினார்கள்.

மலையாளக் காரர்களை வைத்து மந்திரம் சொல்லி பூஜை நடத்தினார்கள். பைரவர் மசியவில்லை. பிறகு அவர் பிராமண பூஜை முதல் காணிக்காரர்கள் பூஜை வரை விதம், விதமாக பூஜைகள் நடத்திப் பார்த்தார். பைரவரை விரட்ட அவர் மேற் கொள்ளாத பூஜைகளே இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் பைரவர் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்றவா முடியும் சுப்பிரமணிய பிள்ளை மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியாகவே முடிந்தன. இனி செய்வதற்கு எதுவுமே இல்லை சுப்பிரமணிய பிள்ளையும், அவர் குடும்பத்தினரும் ஓய்ந்து போய் இருந்த நிலையில்தான், மெல்ல, மெல்ல அற்புதங்கள் வெளிப்படையாக நிகழத் தொடங்கின.

இவ்வளவு நாட்களும் சுப்பிரமணிய பிள்ளை சொன்னது எல்லாம் சரியாக பலித்ததற்கு பைரவர்தான் காரணம் என்பதை உணர்ந்தனர். மக்களுக்கு அனுக்கிரகங்கள் செய்வதற்காகவே சுப்பிரமணிய பிள்ளை உடலை தேர்ந்து எடுத்துள்ளார் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். சுப்பிரமணிய பிள்ளையும் தெய்வ சித்தாந்தத்தை உணர்ந்து பைரவரின் அருளுக்காக தன் உடம்பையே பரிபூரணமாக அர்பணித்து விட்டார்.

மஞ்சள் பொடி கலந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி அபிஷேகித்தனர். அன்று முதல் சுப்பிரமணிய பிள்ளை, ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் என்று மாறி அருளினார். ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகளை ஒரு தடவையை நினைத்தாலே போதும், நினைத்தது நடக்கும் என்ற உண்மை பரவியது.

அவர் கூறும் அருள் வாக்கு, அப்படியே நடக்கிறது என்ற யதார்த்தமும் மக்களிடையே பேசப்பட்டது. இதன் காரணமாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தினமும் ஏராளமானவர்கள் ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகளை அணுகி நல்வாக்கு பெற்று பயன் அடைந்தனர் பயன் அடைந்து வருகிறார்கள். அவரால் பலரது நோய் தீர்ந்தது. பலரது வறுமை விலகியது.

பைரவமே சரண் என்ற வந்தவர்களை ஸ்ரீபைரவம் சித்தாந்தம் உலக வாழ்வியலில் உச்சத்துக்கு கொண்டு சென்றது. பைரவரை இயற்கையாக வணங்கு. போலித் தன்மையை கடைபிடிக்காதே என்பதே ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் அடிக்கடி கூறும் கருத்தாகும். பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் பைரவ மூர்த்தியை வைத்து, அவர் எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம்.

ஆனால் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் லட்சியம் எல்லாம் உலக மக்களின் உன்னத வாழ்வுக்கு உதவுவதாகவே உள்ளது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்வதற்காகவே ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் தன் இருப்பிடத்தை நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மாற்றியுள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நாகர்கோவிலில் இருந்து அருள் பாவித்து வந்த பைரவர், தன் நிலையான இருப்பிடம் இது அல்ல...,

சென்னை புறநகரில் தான் தனது நிரந்தர ஆலயம் உள்ளது என்பதை ஒரு சம்பவம் மூலம் தன் பக்தர்களுக்கு உணர்த்தினார். சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் செல்வி. இவருக்கு ஒரே ஒரு மகள். கல்லூரி சென்று கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை. பல இடங்களில் பூஜை செய்தும் பலன் இல்லை.

பரிகாரங்களும் கை கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் செல்வி குடும்பத்தினருக்கு நாகர்கோவிலில் அருள் பாவித்து வரும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பற்றி தெரிய வந்தது. உடனே அவரை அணுகி பிரச்சினைப் பற்றி கூறினார்கள். மறு நிமிடமே ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள், அந்த பெண்ணின் பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று கூறினார்.

நாகர்கோவிலில் அவர் இருந்தபடியே கூடுவிட்டு கூடு பாய்ந்து சென்னை வந்தார். சில பரிகாரங்களை மட்டும் செய்தார். என்ன ஆச்சரியம்ப வீட்டுக்குள் முடங்கி கிடந்த அந்த பெண் தெளிவு பெற்றார். பிரச்சினைகள் தீர்ந்தது. மீண்டும் அந்த பெண் இயல்பு வாழ்க்கைக்கு வந்து கல்லூரி செல்லத் தொடங்கினார். ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் நிகழ்த்திய அரிய பல அற்புதங்களில் இதுவும் ஒன்று.

இந்த நிகழ்வுக்கு பிறகு செல்வி அவர்கள் ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகளின் ஆசி பெற்றவர்களில் முதன்மை நபராக மாறினார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் மேலும் பலர் ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகளை அணுகி பலன் பெற்றனர். இதனால் பைரவர் பற்றி தகவல்கள் பரவி அவரை தினமும் சந்திக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

இதையடுத்து சென்னை மேற்கு தாம்பரம் நகரில் தான் பூஜை இருப்பிடத்தை ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் ஏற்படுத்தினார். இதன் மூலம் 20-7-2009-ல் அஷ்டமி தினத்தன்று ஸ்ரீ மகா அஷ்ட பைரவ மந்திராலயம் உருவானது. வாடகை வீட்டில் இயங்கி வரும் இந்த மந்திராலயம் ஒரு கிறிஸ்தவருக்குரியது.

ஆனாலும் அவர் பைரவர் பூஜைகள் சொல்லவும், பக்தர்களுக்கு ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருள்வாக்கு சொல்லவும் முழு மனதுடன், இதய சுத்தியுடன் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மகான்களும், அவதாரப் புருஷர்களின் வாழ்க்கை குறிப்புகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், ஒரு உண்மை புலப்படும்.

அதாவது அவர்கள் பிறந்தது ஓரிடமாகவும், அருளாட்சி செய்வது வேறு ஒரு இடமாகவும் இருக்கும். ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் வாழ்க்கை தொடர்ச்சியும், அப்படித்தான் உள்ளது. நாகர்கோவிலில் பிறந்த அவர் சென்னை புறநகரில் திருவடி சூலம் சாலையில் ஸ்ரீ மகா பைரவ ருத்ர ஆலயத்தை உருவாக்கி, அங்கே அருள் பாவித்து வருகிறார்.

பைரவரை அணுகினால் உங்களிடம் உள்ள எல்லா பித பயங்களும் போய்விடும். மனதில் பயமே இல்லாவிட்டால், வாழ்க்கை எவ்வளவு இலகுவாக இருக்கும் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அந்த அரிய சுகத்தைத் தான் ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் நமக்கு வாரி, வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum