தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரும்புள்ளிகளை எளிதில் வீட்டிலேயே நீக்கலாம்!!!

Go down

கரும்புள்ளிகளை எளிதில் வீட்டிலேயே நீக்கலாம்!!! Empty கரும்புள்ளிகளை எளிதில் வீட்டிலேயே நீக்கலாம்!!!

Post  ishwarya Fri Feb 08, 2013 12:24 pm

Blackheads
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்கள் கடைகளில் இருந்தாலும், அவை அனைவருக்குமே சிறந்ததாக செயல்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான சருமம் இருக்கும் என்று சொல்லமுடியாது. மேலும் அந்த கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தினால், சிலசமயங்களில் சருமத்திற்கு அவை சேராமல், பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே அத்தகைய பிரச்சனைகள் எல்லாம் வராமல் இருக்க வேண்டுமென்றால், அதற்கு இயற்கை முறை தான் சிறந்தது. இப்போது அந்த கரும்புள்ளிகளை போக்க வீட்டில் இருக்கும் எந்த பொருட்களை பயன்படுத்தினால் போகும் என்பதைப் பார்ப்போமா!!!

கரும்புள்ளியை நீக்க சில டிப்ஸ்...

* உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.

* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

* கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் ஒரு சிறந்த மருந்து. இதனை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும்.

* எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம் போய்விடும்.

* தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

* பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

எனவே மேற்கூறிய டிப்ஸ்களையெல்லாம் வீட்டில் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி, அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum