சிவராத்திரியின் மகிமையைக் கூறும் கதை
Page 1 of 1
சிவராத்திரியின் மகிமையைக் கூறும் கதை
சிவராத்திரியில் பூஜை செய்தால் கிடைக்கும் பலன்களுக்குச் சான்றாக பழங்காலத்தில் கதை ஒன்றும் கூறப்படுகிறது.
ஒருமுறை சுந்தர சேனகன் என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வெகு நேரமாகியும் வேட்டையாட விலங்குகள் கிடைக்காததால் அன்றைய தினம் இரவில் காட்டிலேயே தங்குவதற்கு முடிவு செய்தான்.
ஒரு மரத்தின் மேல் ஏறி அங்கு படுத்துக் கொள்ள முடிவு செய்தான். தான் படுத்துக் கொள்ளும் மரக் கிளையை சுத்தம் செய்வதற்காக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினான். மரத்தின் மீது ஏறி தூங்கினான்.
அந்த மரம் வில்வ மரம் என்றோ, தான் ஊற்றிய தண்ணீர் கீழே உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகமாக அமைந்தது என்றோ சுந்தர சேனகனுக்குத் தெரியாது.
நள்ளிரவில் காட்டு மிருகங்களின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன், வில்வ மரத்தை சற்றே கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பயத்தால் அவனது உடம்பு குலுங்கியது. அவன் கெட்டியாகப் பிடித்திருந்ததால் அந்த மரம் ஆடியது. அதிலிருந்து வில்வ இலைகள் கீழே உள்ள லிங்கத்தின் மீது அர்ச்சனை செய்வது போல விழுந்தன. அன்றைய தினம் மகா சிவராத்திரியாக அமைந்தது.
மன்னன் தான் அறியாமலேயே சிவ பூஜை செய்து உள்ளான். பின்னர் அடுத்த நாள் வீடு திரும்பிய சுந்தர சேனகன், சிறிது காலத்தில் உயிரிழந்தான்.
மன்னனை எமதர்மன் நரகத்திற்கு கெண்டு சென்றான். ஆனால் சிவபெருமானின் ஆட்கள் சுந்தர சேனகனை எம தர்மனிடம் இருந்து மீட்டு சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிவபெருமான் மன்னனை தன்னுடன் வைத்துக் கொண்டாராம்.
மகா சிவராத்திரி என்று தெரியாமல் பூஜை செய்த மன்னனுக்கே இந்த அளவு சிவபெருமானின் அனுக்கிரஹம் கிடைத்தது என்றால், முறையாக விரதம் இருந்து மகா சிவராத்திரி நாளில் பூஜை செய்வோர் எந்த அளவுக்கு பேறு பெறுவர் என்பதை கூறத் தேவையில்லை.
ஒருமுறை சுந்தர சேனகன் என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வெகு நேரமாகியும் வேட்டையாட விலங்குகள் கிடைக்காததால் அன்றைய தினம் இரவில் காட்டிலேயே தங்குவதற்கு முடிவு செய்தான்.
ஒரு மரத்தின் மேல் ஏறி அங்கு படுத்துக் கொள்ள முடிவு செய்தான். தான் படுத்துக் கொள்ளும் மரக் கிளையை சுத்தம் செய்வதற்காக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினான். மரத்தின் மீது ஏறி தூங்கினான்.
அந்த மரம் வில்வ மரம் என்றோ, தான் ஊற்றிய தண்ணீர் கீழே உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகமாக அமைந்தது என்றோ சுந்தர சேனகனுக்குத் தெரியாது.
நள்ளிரவில் காட்டு மிருகங்களின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன், வில்வ மரத்தை சற்றே கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பயத்தால் அவனது உடம்பு குலுங்கியது. அவன் கெட்டியாகப் பிடித்திருந்ததால் அந்த மரம் ஆடியது. அதிலிருந்து வில்வ இலைகள் கீழே உள்ள லிங்கத்தின் மீது அர்ச்சனை செய்வது போல விழுந்தன. அன்றைய தினம் மகா சிவராத்திரியாக அமைந்தது.
மன்னன் தான் அறியாமலேயே சிவ பூஜை செய்து உள்ளான். பின்னர் அடுத்த நாள் வீடு திரும்பிய சுந்தர சேனகன், சிறிது காலத்தில் உயிரிழந்தான்.
மன்னனை எமதர்மன் நரகத்திற்கு கெண்டு சென்றான். ஆனால் சிவபெருமானின் ஆட்கள் சுந்தர சேனகனை எம தர்மனிடம் இருந்து மீட்டு சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிவபெருமான் மன்னனை தன்னுடன் வைத்துக் கொண்டாராம்.
மகா சிவராத்திரி என்று தெரியாமல் பூஜை செய்த மன்னனுக்கே இந்த அளவு சிவபெருமானின் அனுக்கிரஹம் கிடைத்தது என்றால், முறையாக விரதம் இருந்து மகா சிவராத்திரி நாளில் பூஜை செய்வோர் எந்த அளவுக்கு பேறு பெறுவர் என்பதை கூறத் தேவையில்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகா சிவராத்திரியின் வரலாறு
» சிவராத்திரி விரத முறைகள்
» மஞ்சளின் மகிமையை அறிவோம்
» மஞ்சளின் மகிமையை அறிவோம்
» சிவராத்திரி விரத முறைகள்
» மஞ்சளின் மகிமையை அறிவோம்
» மஞ்சளின் மகிமையை அறிவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum