மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
Page 1 of 1
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.
சிறந்த புராதன சின்னமாகவும், முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி கோயிலில் கடந்த 1995ல் கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடந்தன.
ரூ.14 கோடி செலவில் தங்க விமானம், கோபுரங்கள், பழங்கால ஓவியங்கள், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் என முக்கிய பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு ஜொலித்தன.
வடக்காடி வீதியில் பிரமாண்ட யாகசாலையில் கும்பாபிஷேக பூஜைகளில் 400 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். கடந்த 6ம் தேதி கோயிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 12ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர், கோயிலின் தங்க விமானம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும் சிவாச்சாரியார்கள் தலைமையில் புனிதநீர் குடங்கள் கொண்டு செல்லப்பட்டன. காலை 9.17 மணிக்கு சுவாமி விமானத்திலிருந்து பச்சை கொடி அசைக்கப்பட்டதும், வேத மந்திரங்கள் ஒலிக்க, மேள, தாளங்கள் முழங்க ஒரே நேரத்தில் அனைத்து கோபுரங்களிலும் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர், கலசத்துக்கு பூக்கள் தூவி பூஜை செய்யப்பட்டது. தேவாரம், திருவாசப்பாடல்கள் ஓதுவார்களால் பாடப்பட்டது. கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட பின்பு கோயில் மேல்தளத்தில் இருந்த பக்தர்கள் மீது ஸ்பிரேயர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
காலை 9.30 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள சுந்தரேஸ்வரருக்கும், 9.45 மணியளவில் மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூஜைகள் நடந்தன. காலை 11 மணியில் இருந்து பொதுமக்கள் மூலஸ்தானத்தில் இருக்கும் தெய்வத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சித்திரை வீதி முதல் ஆவணி வீதிகள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்தனர்..
சிறந்த புராதன சின்னமாகவும், முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி கோயிலில் கடந்த 1995ல் கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடந்தன.
ரூ.14 கோடி செலவில் தங்க விமானம், கோபுரங்கள், பழங்கால ஓவியங்கள், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் என முக்கிய பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு ஜொலித்தன.
வடக்காடி வீதியில் பிரமாண்ட யாகசாலையில் கும்பாபிஷேக பூஜைகளில் 400 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். கடந்த 6ம் தேதி கோயிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 12ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர், கோயிலின் தங்க விமானம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும் சிவாச்சாரியார்கள் தலைமையில் புனிதநீர் குடங்கள் கொண்டு செல்லப்பட்டன. காலை 9.17 மணிக்கு சுவாமி விமானத்திலிருந்து பச்சை கொடி அசைக்கப்பட்டதும், வேத மந்திரங்கள் ஒலிக்க, மேள, தாளங்கள் முழங்க ஒரே நேரத்தில் அனைத்து கோபுரங்களிலும் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர், கலசத்துக்கு பூக்கள் தூவி பூஜை செய்யப்பட்டது. தேவாரம், திருவாசப்பாடல்கள் ஓதுவார்களால் பாடப்பட்டது. கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட பின்பு கோயில் மேல்தளத்தில் இருந்த பக்தர்கள் மீது ஸ்பிரேயர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
காலை 9.30 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள சுந்தரேஸ்வரருக்கும், 9.45 மணியளவில் மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூஜைகள் நடந்தன. காலை 11 மணியில் இருந்து பொதுமக்கள் மூலஸ்தானத்தில் இருக்கும் தெய்வத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சித்திரை வீதி முதல் ஆவணி வீதிகள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்தனர்..
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
» மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்!
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
» மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்!
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum