தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெல்லை காந்திமதியம்மன் கோவில்

Go down

நெல்லை காந்திமதியம்மன் கோவில் Empty நெல்லை காந்திமதியம்மன் கோவில்

Post  amma Sun Jan 13, 2013 11:54 am

உலகாளும் சக்தி நெல்லையில் காந்திமதி அம்மன் என்ற திருநாமத்தில் அருள் புரிகிறார். நெல்லையப்பர் கோவிலில் தனி ஆலயத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளிய காந்திமதி அம்மன் இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார் என்பதால் இக்கோயிலுக்கு வந்து வணங்குவோருக்கு திருமணம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.

காந்திமதி அம்மன் கோயிலில் மார்கழிபூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு கோவில் திறந்து, பூஜை நடக்கிறது. சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது.

இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலில் காந்திமதி அம்மன், சுவாமி நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம்.

இதனால் அம்மன் சன்னதி அர்ச்சகர்கள் விதவிதமான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்ல, சிவன் சன்னதி அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. கணவன் உண்டு முடித்த பிறகு மனைவி சாப்பிடுவதாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நெல்லை காந்திமதியம்மன் கோவில்
» அதிகாரியை மாற்றக்கோரி நெல்லை எஸ்.பி.அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்பு
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்பு
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்புநெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும், நகர் பகுதியில் உள்ள இடங் களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலை வேளைகளில் இந்த பஸ்களில் கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum