தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யார் ஒன்பது கல் மோதிரம் அணியலாம்?

Go down

யார் ஒன்பது கல் மோதிரம் அணியலாம்? Empty யார் ஒன்பது கல் மோதிரம் அணியலாம்?

Post  meenu Tue Feb 05, 2013 4:14 pm

புராணங்களில் ஒரு கதை உண்டு. கிருஷ்ணர் விலை மதிக்க முடியாத சமந்தக மணியை தேடி போனதாகவும், அதற்காக பெரும் யுத்தம் கூட நடந்ததாகவும் புராணங்கள் சொல்கிறது.
அது யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு தரித்திரம் என்பதே இருக்காதாம். மகாலக்ஷ்மியே அவர்களிடம் வாசம் செய்வாளாம். செல்வம் ஓடி வரும், வெற்றி தேடி வரும், வீரம் நாடிவரும்.
இது தெய்வங்களுக்கு உரியது. தேவர்களுக்கு உரியது. மனிதர்களுக்கு கிடைக்க போவதில்லை.
நாக ரத்தினம் என்றொரு ரத்தினம் உண்டு. வாலிபம் கடந்து வயோதிகம் அடைந்த நல்ல பாம்பு, தன் வாழ்நாளில் தன் விஷ பையில் இருந்து தன் விஷத்தை இழக்காமல் இருந்தால், அந்த விஷமானது நாகரெத்தினமாக மாறும் என்று சொல்லபடுகிறது.
ஆனால் இதுவரை நாகரெத்தினத்தை பார்த்தவர்களும் இல்லை. வைத்திருப்பவர்களும் இல்லை. ஆனாலும் மற்ற நவரத்தினங்கள் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.
வைரம் வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும். எதிர் மறை எண்ணக்களை போக்கும். அதிஷ்டத்தை அழைத்து வரும். மனம் தெளிவாகும். நடக்குமா. நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா, முடியுமா, முடியாதா என்பது போன்ற எதிர் மறை எண்ணங்கள் எதுவும் வராது.
மாணிக்கம் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்று தருகிறது. ரெத்த ஓட்டத்தை சீராக வைத்து இருக்கிறது.
மரகதம் அணிந்தால் அறிவை பிரகாசிக்க செய்யும். ஞாபக சத்தி அதிகரிக்கும். மறதி குணம், மந்த புத்தியை போக்கும். நரம்பு தொடர்பான வியாதிகளை நீக்கும்.
புஷ்பராகம் கண்பார்வையை சரி செய்யும். திடீர் அதிச்டங்களை அழைத்து வரும்.
வைடுரியம் எதிர் மறை எண்ணத்தை போக்கும். பில்லி சூன்யம் ஏவல் செய்வினை கோளாறுகள் வராமல் பாதுகாக்கும். எதிரிகளை எதிர்ப்புகளை முறியடிக்கும்.
பவழம் வீரத்தை தரும். தேக்கு மரதேகம், தினவெடுத்த தோள்கள், ஆஷானுபாகுவான உடம்பு, என்று சொல்வது மாதிரி கட்டு மஸ்தான உடலை தருகிறது.
முத்து உடல் குளிர்ச்சியை தரும். மனம் தெளிவாகும்.
நீலக்கல் கிரக தோஷத்தை போக்கும்.
கோமேதகம் உடல் வெப்பம் சீராக இருக்க காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு ரெத்தினமும் ஒவ்வொரு பலன்களை தந்தாலும், அனைத்தையும் ஒருவர் அணிந்தது கொள்ள முடியாது.
அப்படி அணிந்து கொள்ள வேண்டுமானால் செவ்வாய் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கலாம். உச்சம் பெற்று இருக்கலாம். அல்லது மேஷ ராசியில். விருச்சிக ராசியில் இருந்தால். அல்லது பிறந்தால் மட்டுமே ஒன்பது கல் மோதிரம் அணிய முடியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum