புலிப்பாணி சித்தர்
Page 1 of 1
புலிப்பாணி சித்தர்
போகர் சீனாவில் வாழ்ந்த காலத்தில் பலமுறை உல கைச் சுற்றி வந்து தாம் கண்டு வந்த அதிசயங்களை சீன மக்களுக்கு கூறினார். இவரின் பேச்சில் காணப்பட்ட ஞானத்தை உணர்ந்து சீனத்து சித்தர் ஒருவர் இவரது சீடரானார். இவர் புலி ஒன்றை வசியப்படுத்தி அதன் மேல் ஏறிக் கொண்டு வனத்தின் பல பகுதிக்கு சென்று மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்தார்.
ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க புலிமேல் ஏறிச்சென்று வெறும் கையாலேயே தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்து குருநாதரிடம் கொடுத்தார். புலிமேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போகரின் மாணவர்களில் இறுதி வரை அவருடன் இருந்தவர் இவரே என்று கூறப்படுகிறது.
பழனிமலை முருகன் கட்டளைக் கிணங்க தண்டாயுதபாணி சிலையைப் போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணியே. நவபாஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறிச் சென்று பறித்து வந்ததாகக் கூறப்படகிறது. அந்த நவபாஷாண முருகக் கடவுளை உருவாக்கிய போகர், சமாதிக்குச் செல்லும் முன் பழனி தண்டாயுதபாணி பூஜைகளைக் கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்துச் சென்றார்.
ஆனால் பிற்காலத்தில் அந்தப் பெருமை பறிக்கப்பட்டு அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழனியில் நவ பாஷா ணத்தால் சிலையை உரு வாக்கிய பின் சீன தேசத்திற்குச் சென்றார். அங்கு தமது தவவலிமைகளை இழந்து விடவே, இந்தப் புலிப் பாணியர் அவரைத்தம் முதுகிலேயே சுமந்து வந்து பழனியில் வைத்து அவருக்குச் சகல தவ வலிமை களையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.
புலிப்பாணி சித்தர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12-ம் இடத்தில் செவ்வாய்கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். இதனால் குடும்ப ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும். நிலத்தகராறு, சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.
சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கி யம் உண்டாகும். அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரி களுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும். கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் செங்கல், சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந் தால் திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். இவருக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, ரோஜா, செவ்வரளி மேலே புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
இவரை வழிபட சிறந்த நாள் செவ்வாய்க் கிழமை. பழனி ஸ்ரீதண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்மந்தப்பட்ட நோய்கள் அகலும். அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும். அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்
» புலிப்பாணி ஜோதிடம் 13-34
» புலிப்பாணி ஜோதிடம் 1-12
» புலிப்பாணி ஜோதிடம் 54-64
» புலிப்பாணி ஜோதிடம் 35-44
» புலிப்பாணி ஜோதிடம் 13-34
» புலிப்பாணி ஜோதிடம் 1-12
» புலிப்பாணி ஜோதிடம் 54-64
» புலிப்பாணி ஜோதிடம் 35-44
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum