படவேடு ரேணுகாம்பாள் கோயில்
Page 1 of 1
படவேடு ரேணுகாம்பாள் கோயில்
மூலவர் - ரேணுகாம்பாள்
தல விருட்சம் - மாமரம்
தீர்த்தம் - கமண்டலநதி
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் - படவேடு
மாவட்டம் - திருவண்ணாமலை
பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண் பிரசாதமாகத் தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாகத் தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.
இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவது ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில், அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வருடா வருடம்ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.
அத்திமரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறையில் அன்னை ரேணுகாதேவி(சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களாகவும் உள்ளனர்.
மேலும், ஆதிசங்கரர் பிரதிட்டை செய்த பாணலிங்கமும், சிலாசிரசும், சுதையிலான அம்மனின் முழுத்திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசு உள்ளது. பொதுவாக அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள். இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்....
காலை 6.40 பகல் 1மணி, மாலை 3 இரவு 8.30 மணி வரை - வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் தரிசன நேரம் மாறுபடும்.
தல விருட்சம் - மாமரம்
தீர்த்தம் - கமண்டலநதி
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் - படவேடு
மாவட்டம் - திருவண்ணாமலை
பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண் பிரசாதமாகத் தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாகத் தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.
இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவது ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில், அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வருடா வருடம்ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.
அத்திமரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறையில் அன்னை ரேணுகாதேவி(சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களாகவும் உள்ளனர்.
மேலும், ஆதிசங்கரர் பிரதிட்டை செய்த பாணலிங்கமும், சிலாசிரசும், சுதையிலான அம்மனின் முழுத்திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசு உள்ளது. பொதுவாக அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள். இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்....
காலை 6.40 பகல் 1மணி, மாலை 3 இரவு 8.30 மணி வரை - வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் தரிசன நேரம் மாறுபடும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» படவேடு ரேணுகாம்பாள் கோயில்
» ரேணுகாம்பாள் கோயில் - படவேடு
» ரேணுகாம்பாள் கோயில் - படவேடு
» ரேணுகாம்பாள் கோயில் - படவேடு
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» ரேணுகாம்பாள் கோயில் - படவேடு
» ரேணுகாம்பாள் கோயில் - படவேடு
» ரேணுகாம்பாள் கோயில் - படவேடு
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum