தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகனுக்கு வயது 30. அமெரிக்காவில் வேலை. மூன்று வருடங்களாக எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறான். இளைய வயதில் இவ்வாறு சென்று அதிக அளவில் சம்பாதிப்பது சந்தோஷம்தான் என்றாலும், அவன் எங்களுக்கு ஒரே மகனாக இருப்பதால், எங்களுடனேயே இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம்.

Go down

 என் மகனுக்கு வயது 30. அமெரிக்காவில் வேலை. மூன்று வருடங்களாக எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறான். இளைய வயதில் இவ்வாறு சென்று அதிக அளவில் சம்பாதிப்பது சந்தோஷம்தான் என்றாலும், அவன் எங்களுக்கு ஒரே மகனாக இருப்பதால், எங்களுடனேயே இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். Empty என் மகனுக்கு வயது 30. அமெரிக்காவில் வேலை. மூன்று வருடங்களாக எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறான். இளைய வயதில் இவ்வாறு சென்று அதிக அளவில் சம்பாதிப்பது சந்தோஷம்தான் என்றாலும், அவன் எங்களுக்கு ஒரே மகனாக இருப்பதால், எங்களுடனேயே இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம்.

Post  meenu Fri Feb 01, 2013 1:21 pm

தன்னைப்போலவே இவன் அறவழி வாழ்ந்து முன்னேற வேண்டும் என்னும் பொருளில்தான் குழந்தைக்கு வடமொழியில் ‘ஸந்ததி’ எனப் பெயர். யாரையுமே அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், ‘மன நிம்மதி, சந்தோஷம்’ என்பதுதான் அவருடைய முதல் பதிலாக இருக்கும்.

அதுபோல உங்கள் மகனுடன் நீங்கள் இருக்க விரும்புவதும் நியாயமானதுதான். அதுதான் மன நிம்மதி. வயதான காலத்தில் இந்த ஆசையும் ஏக்கமும் உங்களுக்கு அதிகமாக இருப்பதும் இயல்புதான்.

குளத்தில் பெரிய மீனானது தன் குட்டிகளோடு சேர்ந்து சுற்றி ஆனந்தப்படுவதுபோல, காக்கைக்கும் தன் குஞ்சு மாதிரி எத்தனை வயதானாலும் அவர்கள் உங்களுக்கு குழந்தைகள்தான். பாதுகாப்பு உணர்வு குறையும் வயதில், மனதுக்கு அதுவொரு டானிக் மாதிரி அமையும்.

ஏதேனும் ஒரு பொருளை அடைந்தால் அதை சொத்து என்பார்கள். அதே ஒரு பிள்ளையைப் பெற்றால் அதை பாக்யம் என்கிறார்கள். பெற்றோரை இயற்கை ஜெராக்ஸ் செய்து கொடுப்பதுதான் மழலைச் செல்வத்தின் பிறப்பு.

அமெரிக்காவில் இருந்தாலும் நம் நாட்டிற்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள். மகனும் அதேபோல விருப்பப்படுகிறார் என்றே நான் நம்புகிறேன். மகனுடன் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டுமென்பது தெய்வ அனுக்ரகத்தால் நிச்சயம் முடியும்; கவலைப்படாதீர்கள்.


முருகனை சமஸ்கிருதத்தில் ஸ்கந்தன் என்பார்கள். அதற்கு பிரிந்து சேர்ந்தவன், பிரிந்தவர்களை இணையச் செய்யும் ஆற்றலும் பெற்றவன் என்று பொருள். திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள்.

முருகன் கோயிலுக்குள் கூட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் அமர்ந்து ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனை துதித்து சொன்ன இந்த ஸ்லோகத்தை 48 தடவை சொல்லுங்கள். சிவப்பு அரளி புஷ்பத்தை முருகனின் திருப்பாதத்தில் சேர்க்கச் சொல்லுங்கள். சீக்கிரமே கூடி வாழ்வீர்கள்.


ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா சூர நாமா, ஹதஸ்தாரகஹ
ஸிம்ம வக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹ்ருதிஸ்தம்மன: க்லேச மேகம் நஹம்ஸி
ப்ரேபோ. கிம்கரோமி. க்வியாமி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
» என் வயது 31. மூன்று வருடங்களாக என் திருமணம் தடைபட்டு வருகின்றது. இதற்கு, என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய அரச மரம்தான் காரணம் என்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?நாம் வசிக்கும் கட்டடத்துக்கு வெளியே, தோட்டத்தில் அரச மரம் இருப்பது தோஷமாகாது. அது கட்ட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum