தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

Go down

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா Empty ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

Post  ishwarya Thu May 23, 2013 11:53 am

“குரு பார்க்க கோடி நன்மை” என்பார்கள். “குருவருள் இருந்தால் தான் இறைவனின் திருவருள் கிடைக்கும்” என்பது பழமொழி. ஒருவரது வாழ்க்கையில் தலைமை பதவி, அதிகாரம், புகழ், நன்மக்கட்பேறு , செல்வம் ஆகியவற்றுக்கு குருபகவானே காரணமாக இருக்கிறார். அதனால்தான் நவக்கிரகங்களில் குரு பகவான் முதன்மையானவராக விளங்குகிறார்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குருபகவான் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார், அவ்வாறு பெயர்ச்சியாகும் காலத்தில் குரு பகவான், கிரக அமைப்புகளுக்கேற்றவாறு பலன்களை வழங்குவார். இந்தாண்டு குருபகவான் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இதனை முன்னிட்டு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசி உள்ளவர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் உகந்ததாகும். தமிழகத்தில் குரு பரிகார ஸ்தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் எழுந்தருளி வரும் குரு பகவானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர், இக்கோவிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தகைய பெருமைகள் வாய்ந்த இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா வருகிற 28- ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

அன்று குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும் பால், மஞ்சள், இளநீர், தேன், உள்ளிட்ட அபிஷேகம் நடக்கிறது. அதைதொடர்ந்து குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாலிக்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி முதல் கட்ட லட்சார்ச்சனை விழா வருகிற 16 - ந்தேதி முதல் (வியாழக்கிழமை) தொடங்கி 23 - ந்தேதி வரை நடக்கிறது.

பின்னர் 2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 30- ந் தேதி முதல் (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6- ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது.

லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மற்றும் கோவில் ஊழிர்கள் செய்து வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆலங்குடி குருபரிகார கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது
» பண்ணாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா: 1 லட்சம் பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்
» ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா
» 30ம் தேதி முத‌ல் சபரிமலை உத்திரம் விழா
» மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா; 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum