தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

30ம் தேதி முத‌ல் சபரிமலை உத்திரம் விழா

Go down

30ம் தேதி முத‌ல் சபரிமலை உத்திரம் விழா  Empty 30ம் தேதி முத‌ல் சபரிமலை உத்திரம் விழா

Post  meenu Thu Feb 07, 2013 4:46 pm

கேரள மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீனம் உத்திரம் திருவிழா மார்ச் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக 29ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.

30ம் தேதி காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.

மறுநாள் முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை ஸ்ரீபூதபலி, உற்சவபலி நடைபெறும்.
ஏப்ரல் 7ம் தேதி பள்ளிவேட்டையும், மறுநாள் பம்பை கணபதி கோயில் அருகே உள்ள குளத்தில் பிரசித்தி பெற்ற ஆறாட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

அன்று காலை ஐயப்ப விக்கிரகம் யானை மீது வைக்கப்பட்டு பம்பைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். ஆறாட்டு நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் 3 மணி வரை ஐயப்ப விக்கிரகம் பம்பை கணபதி கோயிலில் தரிசனத்துக்காக வைக்கப்படும்.

பின்னர், யானை மீது வைக்கப்பட்டு சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படும்.

உ‌த்‌திர‌ம் ‌விழா ‌நிறைவடை‌ந்து ஏப்ரல் 8ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum