தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு

Go down

கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு Empty கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு

Post  ishwarya Thu May 02, 2013 6:09 pm

டெல்லியில் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு, கலவரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது சி.பி.ஐ. 3 வழக்குகளை பதிவு செய்தது. இதில் ஒரு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில். அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று விடுவித்தது. இந்த தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டில் இருந்த சீக்கியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது, நீதிபதி மீது ஒருவர் திடீரென தனது ஷூவை வீறி எறிந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் பெயர் கர்னைல் சிங் என்பது தெரியவந்தது.

இதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன் குமார் விடுதலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்த சீக்கியர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  1984 கலவர வழக்கு: காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலை
» டெல்லி கலவர வழக்கில் விடுதலையான சஜ்ஜன்குமாரை தண்டிக்க ஆதாரம் உள்ளதா?: ரூ.5 1/2 கோடி பரிசு அறிவிப்பு
» 'விஸ்வரூபம்' பட பிரச்சினை நாளை தீர்ப்பு: சமரசம் பேச நீதிபதி யோசனை
» காங்கிரஸ் தலைவர் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்
»  காங்கிரஸ் தலைவர் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum