தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

1984 கலவர வழக்கு: காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலை

Go down

 1984 கலவர வழக்கு: காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலை Empty 1984 கலவர வழக்கு: காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலை

Post  ishwarya Thu May 02, 2013 6:11 pm

1984ம் ஆண்டு இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. பல்வேறு இடங்களில் நடந்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சுல்தான் பூரியில் நடந்த கலவரத்தில் தொடர்புடையதாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் மீது 2005ம் ஆண்டு சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதேபோல் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் நடந்த கலவரத்தில் தொடர்புடையதாக பல்வான் கோக்கர், கிஷன் கோக்கர், மகேந்தர் யாதவ், கிர்தாரி லால், கேப்டன் பாக்மால் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், டெல்லி முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமாரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று விடுவித்தது. மற்ற 5 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. சஜ்ஜன் குமார் தற்போது ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், கலவரம் தொடர்பாக அவர் மீது மேலும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு
» காங்கிரஸ் தலைவர் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்
»  காங்கிரஸ் தலைவர் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்
» காங்கிரஸ் தலைவர் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்
» ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum