நாள்தோறும் இலங்கையர் 20 பேர் மாரடைப்பினால் இறக்கின்றனர்! - சுகாதாரத் திணைக்களம்
Page 1 of 1
நாள்தோறும் இலங்கையர் 20 பேர் மாரடைப்பினால் இறக்கின்றனர்! - சுகாதாரத் திணைக்களம்
கடந்த மூன்று நான்கு மாதங்களில் இலங்கையில் மாரடைப்பு ஏற்படுபவர்களின் தொகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இதற்கேற்ப, இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களுள் முதன்மையான நோயாக மாரடைப்பு உள்ளது எனத்தெரிவிக்கப்படுகின்றது. ஒருநாளைக்கு மாரடைப்புக்காக சிகிச்சை பெற வருபவர்களின் தொகை 620 ஐ எட்டுகின்றது. மாதாந்தம் 18,600 ஆகவும் வருடத்திற்கு இரண்டு இலட்சத்து இருபத்து மூன்றாயிரத்து இருநூறு பேர் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதில், 20பேர் தினந்தோறும் இறக்கின்றனர். மாதத்திற்கு 600 பேர், வருடாந்தம் 7000 க்கு மேற்பட்டோரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியதாக மாரடைப்பு முன்னணியில் நிற்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கேற்ப, இலங்கையரில் அதிகமானோர் மரணத்தைத் தழுவுவதில் முதலிடத்தில் இருப்பது மாரடைப்பாகும்.
இவ்வாறு மரணத்தைத் தழுவுபவர்களில் பெரும்பாலானோர் புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மற்றும் கொலஸ்ட்ரோல் அதிகமாதல், அதிக இரத்தப் போக்குடையவர்கள், நாளைக்கு 5 நிமிடமாவது தேகாப்பியாசம் செய்யாதவர்கள் என்பவர்களே.
அதிக எண்ணெய், சீனி, மாப்பொருள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் மற்றும் ஒருநாளைக்கு 10,000 அடிகளேனும் நடக்காதவர்கள் ஆகியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியவர்களாவர் என சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கேற்ப, இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களுள் முதன்மையான நோயாக மாரடைப்பு உள்ளது எனத்தெரிவிக்கப்படுகின்றது. ஒருநாளைக்கு மாரடைப்புக்காக சிகிச்சை பெற வருபவர்களின் தொகை 620 ஐ எட்டுகின்றது. மாதாந்தம் 18,600 ஆகவும் வருடத்திற்கு இரண்டு இலட்சத்து இருபத்து மூன்றாயிரத்து இருநூறு பேர் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதில், 20பேர் தினந்தோறும் இறக்கின்றனர். மாதத்திற்கு 600 பேர், வருடாந்தம் 7000 க்கு மேற்பட்டோரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியதாக மாரடைப்பு முன்னணியில் நிற்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கேற்ப, இலங்கையரில் அதிகமானோர் மரணத்தைத் தழுவுவதில் முதலிடத்தில் இருப்பது மாரடைப்பாகும்.
இவ்வாறு மரணத்தைத் தழுவுபவர்களில் பெரும்பாலானோர் புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மற்றும் கொலஸ்ட்ரோல் அதிகமாதல், அதிக இரத்தப் போக்குடையவர்கள், நாளைக்கு 5 நிமிடமாவது தேகாப்பியாசம் செய்யாதவர்கள் என்பவர்களே.
அதிக எண்ணெய், சீனி, மாப்பொருள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் மற்றும் ஒருநாளைக்கு 10,000 அடிகளேனும் நடக்காதவர்கள் ஆகியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியவர்களாவர் என சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வட மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது: தேர்தல் திணைக்களம் தெரிவித்தது!
» சித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள்
» நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்!
» இலங்கையர் இந்தியாவுக்கு சுற்றுலாச் செல்வது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்கிறீரா? - அநுர திசாநாயக்க
» ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு அண்மையில் நிர்க்கதியாக இலங்கையர்! (படங்கள் இணைப்பு)
» சித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள்
» நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்!
» இலங்கையர் இந்தியாவுக்கு சுற்றுலாச் செல்வது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்கிறீரா? - அநுர திசாநாயக்க
» ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு அண்மையில் நிர்க்கதியாக இலங்கையர்! (படங்கள் இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum