தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உரிமை கோரப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணி வலி.வடக்கு, கிழக்கில் சுவீகரிப்பு; உரிமை கோருபவர்களுக்கு இழப்பீடு- துமிந்த அமரசேகர

Go down

உரிமை கோரப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணி வலி.வடக்கு, கிழக்கில் சுவீகரிப்பு; உரிமை கோருபவர்களுக்கு இழப்பீடு- துமிந்த அமரசேகர Empty உரிமை கோரப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணி வலி.வடக்கு, கிழக்கில் சுவீகரிப்பு; உரிமை கோருபவர்களுக்கு இழப்பீடு- துமிந்த அமரசேகர

Post  ishwarya Tue Apr 30, 2013 1:07 pm

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் 38 ஆயிரத்து 97 பேச் அளவு காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதியுடைய அறிவித்தலை யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ஏ.சிவசுவாமியின் கையெழுத்துடன் நேற்றைய தினம் வலிகாமம் பகுதியில் படையினர் மற்றும் கிராமஅலுவலர், பட்டதாரிப் பயிலுநர்கள் ஒட்டியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த காணிக்கு உரிமை கோருபவர் என கூறப்படுபவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் யாழ். காணி சுவீகரிப்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க காணி எடுத்தல் திருத்தச் சட்டத்தின் படி திருத்தப்பட்டவாறான காணிகொள்ளும் சட்டத்தின் 2ஆம் பிரிவின் முதலாம் உட்பிரிவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஆணையிட்டதன் பிரகாரம் குறித்த காணி பொதுத் தேவைக்கு அவசியம் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைத்தல் மற்றும் உயர்பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இராணுவத் தளங்களின் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகவும், குறித்த இடம் தேவைப்படுவதாக காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் ஊடகச் செயலாளர் துமிந்த அமரசேகர தெரிவிக்கையில், இந்த காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அதனை உறுதிப்படுத்தினால் அவர்களுக்குத் தேவையான இழப்பீடுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மிகவும் அத்தியாவசியமான காணிகள் மாத்திரமே சுவீகரிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட
» வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்
» இராணுவத் தேவைக்காக வன்னியில் 20 ஏக்கர் காணி சுவிகரிப்பு! (அறிவித்தல் இணைப்பு)
» வடக்கு, கிழக்கில் சிகரெட் மூலம் 5 பில்லியனுக்கு மேல் வருமானம்?
» வலி வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த வாரீர். பகிரங்க அழைப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum