தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 54 பேர் பலி

Go down

அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 54 பேர் பலி  Empty அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 54 பேர் பலி

Post  ishwarya Thu Apr 04, 2013 1:07 pm

அர்ஜெண்டினா நாட்டில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 54 பேர் பலியாகியுள்ளனர்.

அர்ஜெண்டினா நாட்டில் கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து கன மழை பெய்து வருகிறது. லா ப்லாடாவில் மட்டும் 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் பியுனெஸ் ஐரெஸ் நகரிலும் கடும் மழை பெய்துள்ளது. கன மழையை அடுத்து கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் லா ப்லாடாவில் மட்டும் 48 பேரும், பியுனெஸ் ஐரெஸ் நகரில் 6 பேர் பலியாகியுள்ளனர் என்று அம்மாகாண கவர்னர் டேனியல் கூறியுள்ளார். 54 பேர் பலியானதை தொடர்ந்து நாட்டில் புதன்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் கன மழையினால் ஆறுகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சம்பவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு புதைந்திருக்கும் உடல்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் வற்றிய பின்புதான் சடலங்கள் மீட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று கவர்னர் டேனியல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு அரசு அலுவலங்கள் செய்படாமல் மூடப்பட்டுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு அதிபர் கிறிஸ்டினோ பெர்னான்டஸ் டி கிர்ச்னர் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
»  ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்
» ஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum