தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் பலாத்காரம் செய்து 8 மாத கர்ப்பிணி படுகொலை- 3 பேர் கைது!

Go down

பாலியல் பலாத்காரம் செய்து 8 மாத கர்ப்பிணி படுகொலை- 3 பேர் கைது! Empty பாலியல் பலாத்காரம் செய்து 8 மாத கர்ப்பிணி படுகொலை- 3 பேர் கைது!

Post  meenu Wed Mar 13, 2013 6:03 pm



4 பேர் கொண்ட கும்பல் எட்டு மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தூர் அருகே நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்தூர் அடுத்த குடிபாலா மண்டலம் சீலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). இவர், வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய மனைவி நதியா (24) 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்தார். பிரசவத்துக்காக நதியா சில நாட்களுக்கு முன்பு தாளம்பேடுவில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலம் வழியாக நேற்று சென்ற நதியாவை 4 பேர் திடீரென வழிமறித்து வாயை பொத்தி அருகே உள்ள முட்புதருக்கு தூக்கி சென்றனர். அங்கு 4 பேரும் நதியாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. விஷயம் ஊருக்கு தெரிந்துவிடுமோ என பயந்து நதியாவின் கழுத்து இறுக்கி கொலை செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த நதியாவின் கணவர் நித்தியானந்தம், முட்புதர் அருகே 4 பேர் நிற்பதை பார்த்துள்ளார். கும்பலில் இருந்த ஒருவன் உடனே கத்தியை காட்டி மிரட்டி திரும்பி செல்லுமாறு நித்தியானந்தத்தை எச்சரித்தான்.

சந்தேகம் அடைந்த அவர், ஊருக்கு சென்று கிராமத்தினரை அழைத்து வந்தார். அங்கு நதியா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்து சித்தூர் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து நதியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நதியாவை பலாத்காரம் செய்து கொன்றதாக அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் வீட்டை கல் வீசி தாக்கினர்.

அவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார், அதே கிராமத்தை சேர்ந்த மணவாளன், குபேந்திரன், கருணாநிதி ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நதியா கொலை செய்யப்பட்டதற்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!
» பாலியல் பலாத்காரம் செய்து என்ஜினீயரிங் மாணவி எரித்துக்கொலை!
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை பொலிஸ் கைது!
» மூர்க்கதனமான பாலியல் பலாத்காரம்: 5 வயது சிறுமி பலி
»  Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum