தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரம்பலூரில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் நடந்தது

Go down

பெரம்பலூரில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் நடந்தது Empty பெரம்பலூரில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் நடந்தது

Post  meenu Tue Mar 12, 2013 12:32 pm

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள காவலர் சிறுவர் மன்ற கட்டிட வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சாம் பசிவம், மாவட்ட செயலாளர் ஜி.பால குருமூர்த்தி, துணைச் செயலாளர்கள் தங்கையன், முத்துராமன், மாவட்ட பொருளாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு. தமிழ்நாடு காவல்துறை ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் நலச்சங்கம் என்ற பெயரை மாற்றி மாநில தலைமை ஆலோசனையின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் என்ற பெயருடன் மாநில சங்கத்துடன் இணைந்து செயல்படுவது.

அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் நடந்த போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த காவல்துறையினரை இக்கூட்டம் பாராட்டுகிறது. அத்துடன் அவர்களுக்கு பரிசளித்து கவுரவித்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவிற்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் 80 வயது நிறைவடைந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அயன் பேரையூர் பெரியசாமி, 70 வயது நிறைவுபெற்ற முன்னாள் போலீஸ் எறையூர் ஏட்டு ராமசாமி ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் சுலைமான், சங்க ஆலோசகர்கள் சிவ பிச்சை, மாரிமுத்து, அலுவலக நிர்வாகி அப்துல்சலீம், லிங்கவன், செயற்குழு உறுப்பினர்கள் செல்லமுத்து, டி.பெரியசாமி, ராஜேந்திரன், ஆறுமுகம், என்.டி.பெரியசாமி, ஆறுமுகம், பரமசிவம், கோவிந்தசாமி, வீராசாமி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» ‘காவலர் குடியிருப்பு’.. ஒரு நிஜ சினிமா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum