தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந

Go down

திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந Empty திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந

Post  meenu Thu Mar 28, 2013 2:46 pm

திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தன. 2 வீடுகளிலும் சேர்த்து 122 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 1/2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். இந்த 2 கொள்ளைகளிலும் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த வயலூர் மெயின் ரோடு கனரா வங்கி காலனி முதல் கிராசில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 46). இவர் திருச்சி பாலக்கரையில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். பங்குனி உத்திர விழாவையொட்டி பழனிச்சாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றிருந்தார்.

பழனிச்சாமி அவரது கடையில் வேலை செய்யும் சதீஷ்குமார் என்பவரை வீட்டில் வைத்து இருக்கும் பூச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்படி கூறிவிட்டு சென்றார். நேற்று சதீஷ்குமார் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி பழனிச்சாமிக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து உறையூர் போலீசார் பழனிச்சாமியின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பழனிச்சாமி பீரோவில் வைத்து இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளைய போய் இருந்ததை கண்டு பிடித்தனர். இதுபற்றி உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழனிச்சாமி வீட்டுக்கு வந்த பின்னர் தான் மேலும் ஏதாவது கொள்ளை போய் உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். உறையூர் பகுதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum