தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலா படத்தில் நடித்ததே விருது கிடைத்த மாதிரி...! நெகிழ்கிறார் அங்கம்மா வேதிகா...!!

Go down

பாலா படத்தில் நடித்ததே விருது கிடைத்த மாதிரி...! நெகிழ்கிறார் அங்கம்மா வேதிகா...!!  Empty பாலா படத்தில் நடித்ததே விருது கிடைத்த மாதிரி...! நெகிழ்கிறார் அங்கம்மா வேதிகா...!!

Post  ishwarya Sat May 25, 2013 1:24 pm

அவன் இவன் படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. அதர்வா ஹீரோவாகவும், வேதிகா, தன்ஷிகா ஆகியோர் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1940களில் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார் டைரக்டர் படாலா. அதுமட்டுமின்றி இப்படத்தை பி ஸ்டுடியோ சார்பில் தானே தயாரிக்கவும் செய்துள்ளார். பாலா இயக்கிய படங்களிலேயே மிககுறைந்த நாளில் வெறும் 90நாட்களில் படமாக்கப்பட்ட படம் இது. இப்படம் மார்.15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை வேதிகா தினமலருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...

பரதேசியை இந்தியாவே எதிர்பார்க்குது : பாலா சாரின் 6வது படம் பரதேசி. இந்தப்பட ரிலீஸ்க்காக தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியாவே எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கு. பாலா சார் படத்தில் நடித்தது என் திரை பயணத்தில் மறக்க முடியாத அனுபவம். அவர் மனசில என்ன நினைச்சிருந்தாரோ அதை நடிகர்கள் கொண்டு வரும் வரை விடமாட்டார். ஹீரோ, ஹீரோயின் மட்டும் இல்லை, ஜீனியர் ஆர்டிஸ்டு கூட ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்காங்க, படத்தில் வேலை பார்த்த மொத்த டீமும் உசிர கொடுத்து உழைச்சிருக்கோம்.

இது ஒரு பீரியட் பிலிம் என்பதால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த காலத்தையே கேமரா பதிவுகள் மூலம் கண் முன்னாடி கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். இந்த படத்தில் நடித்த ஒரு சிறிய கேரக்டர் கூட அவ்ளோ நல்லா வெளியில் தெரிவாங்க, அப்படி ஒரு வாய்ப்பு படத்தில் நடிச்ச எல்லோருக்கும். என் கேரக்டரை பார்த்த நானா அப்படின்னு கேட்பீங்க. ஒரு மரம் மேல ஏறி நின்று டிரம்ஸ் அடிச்சிட்டு, தலையாட்டிட்டு, அந்த கேரக்ட்ராகவே என்னை மாத்திட்டாரு பாலா. எனக்கு உயரமான இடத்தை பார்த்தாலே பயம் வந்திடும், ஆனா 45 நிமிடம் அந்த மரம் மேல நிக்க வச்சு ஷூட் பண்ணார், அதை ஸ்கிரீனில் பார்த்தா தான் உங்களுக்கு தெரியும்.

மாஸ்டர் மைண்டு இயக்குனர் பாலா : பாலா சார் மாஸ்டர் மைண்டு இயக்குனர். சின்ன விஷயம் கூட கவனிச்சு வெளிவர வைப்பார். நடிக்கும்போது கண் அசைவு எப்படி இருக்கணும், தலைமுடி எங்க நிக்கணும், எல்லாம் அப்படியே சொல்வார், செய்து காட்டுவார். நான் இல்ல இந்த படத்துல எந்த ஒரு நடிகையையும் நடிக்க ‌வச்சாலும் அவங்க கண்டிப்பா பேசப்படுவாங்க, அவ்ளோ ஸ்பெஷல் இந்தப்படம்.

கதையே வித்தியாசமானது : இப்ப வரைக்கும் நிறைய சிட்டி ரோல்தான் பண்ணிருக்கேன். பாலா மாதிரி இயக்குனர்கள் கிடைத்தால் எங்கள் திறமைகளை வெளிகொண்டு வர படங்களில் நடிக்கலாம். தெலுங்கில் 1980-ல் உள்ள கிராமத்து பெண் ரோலில் நடிச்சேன். தமிழ்ல முதன் முதலில் பாலா சார் பரதேசி படத்தில் பக்கா கலாட்டா பண்ற கிராமத்து பெண், 17 வயசு அங்கம்மா ரோலில் அப்படியே நடிச்சிருக்கேன் இல்லை இல்ல நடிக்க வச்சிருக்காரு பாலா சார். எல்லாரும் சொல்வாங்க ரொம்ப வித்தியாசமான படம்னு, ஆனா நிஜமாவே பரதேசி ஸ்கிரிப்ட் ரொம்ப வித்தியாசமானது. கேரக்டர், நடிப்பு, கெட்-அப் லுக் எல்லாமே படம் பார்க்கும் ஆடியன்சுக்கு ரொம்ப புதுசா வித்தியாசமா இருக்கும்.

பாலா படத்தில் நடித்ததே விருது கிடைத்த மாதிரி : பரதேசி படம் வெளிவந்ததும், எல்லார்க்கும் விருது கிடைக்கும், அந்த அளவு படம் இருக்குனு சொல்றாங்க, என்னைப் பொருத்த வரை, எப்ப பாலா சார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டாங்களோ அப்பவே எனக்கு விருது கிடைச்ச மாதிரி தான். அதுதான் எனக்கு பெரிய அவார்டு, ‌கெளரவம் என்று நினைக்கிறேன். ரொம்ப சிரமப்பட்டு வாழ்ந்த கதையை சொல்லியிருக்கோம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum