தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செயற்கை கண் இமைகளைப் பொறுத்த டிப்ஸ்…

Go down

செயற்கை கண் இமைகளைப் பொறுத்த டிப்ஸ்… Empty செயற்கை கண் இமைகளைப் பொறுத்த டிப்ஸ்…

Post  ishwarya Mon May 13, 2013 5:14 pm

கண்களுக்கு அழகைத் தரும் கண் இமைகள், சிலருக்கு மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அவர்களது அழகில் சற்று வித்தியாசம் தெரியும். ஆகவே அவர்கள் தங்கள் கண் இமைகளை சற்று அழகாக, பெரிதாக காண்பிக்க கடைகளில் செயற்கையாக செய்து விற்கப்படும் கண் இமைகளை வாங்கி பொறுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு தன் கண்களை அழகாக வைக்கப் பொறுத்திக் கொள்ளும் போது, முகத்திற்கு மேக் கப் செய்யும் போது, செயற்கைக் கண் இமைகளுக்கு மட்டும் மேக் கப் செய்யாமல் இருக்க முடியுமா என்ன? ஆகவே அத்தகைய கண் இமைகளுக்கு மேக் கப் செய்ய சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

செயற்கை கண் இமைகள் சற்று பெரிதாக நீளமாக இருக்கும். ஆகவே அப்போது அதனை நம் கண்களுக்கு ஏற்ப சரியான வடிவத்தில் மற்றும் நீளத்தில் ட்ரிம் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போது தான் அது நம் கண்களுக்கு ஏற்ற அழகைத் தரும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கும் இமைகள் சற்று வளைந்து சுருண்டு உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

நம் கண்களின் வடிவத்திற்கு ஏற்ப ட்ரிம் செய்த பின்னர், அதனை அப்படியே கண்களில் பொறுத்த முடியாது. மேலும் அதன் முனைகளை நேரடியாக பசையில் தடவியும் கண்களில் வைக்க முடியாது. ஆகவே அப்போது பசையை கைகளின் பின்னால் தடவி, பிறகு கண் இமைகளை ட்வீசர் கருவியைக் கொண்டு, கண்களில் மெதுவாக கவனமாக பொறுத்த வேண்டும். இதனால் கண்களில் பசை பரவாமல் தடுக்கலாம்.

இமைகளை கண்களில் சரியாகப் பொறுத்திய பின், கை விரல்களைக் கொண்டு, சற்று அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும் போது, பார்த்து கவனமாக அழுத்த வேண்டும். முக்கியமாக அதிக அழுத்தத்தை கொடுக்காமல் இருந்தால் நல்லது. இல்லையென்றால் அது வெளியே வந்துவிடும். அவ்வாறு கண்களில் பொறுத்தியப் பின்னர், விரல்களை அதன் மேல் 30-40 நொடிகள் வைத்து, காய வைக்க வேண்டும். பிறகு மெதுவாக கைகளை எடுக்க வேண்டும்.

எப்போது கண் இமைகள் காய்ந்துவிடுகிறதோ, அப்போது அதன் மேல் மஸ்காராவை தடவலாம். ஏனெனில் மஸ்காரா தடவினால் கண் இமைகள் நீளமாக அழகாக தெரியும். மேலும் மஸ்காரா தடவியப் பின்னரும், விரல்களை வைத்து, இமைகளை சற்று அழுத்த வேண்டும். இது கூட இமைகளை கண்களில் நன்கு பொறுத்த உதவும் ஒரு இயற்கை பொருள். மேலும் மஸ்காராவை போடும் முன், கண் இமைகளை சீவும் சீப்பைக் கொண்டு ஒரு முறை சீவ வேண்டும். இதனால் இமைகள் சரியாக சுருண்டு இருக்கும்.

எப்போது செயற்கை கண் இமைகளைப் பொறுத்துகிறோமோ, அப்போது கண்களுக்கு ஐ-லைனர் போடும் போது, சிறிது இடம் விட்டு போட வேண்டும். இதனால் செயற்கை கண் இமைகள் அழகான தோற்றத்தில் இயற்கை இமைகளைப் போன்று காணப்படும். வேண்டுமென்றால் இந்த ஐ-லைனரை மெல்லியதாகவும், அடர்த்தியாகவும் போடலாம். அது உங்களது விருப்பத்தை பொறுத்தது.

இவ்வாறு செயற்கை கண் இமைகளை பொறுத்தினால், கண்கள் அழகாக காண்பதோடு, முகமும் அழகோடு காணப்படும். முக்கியமாக செயற்கைக் கண் இமைகளை பொறுத்தும் போது, கண்களுக்கு ஐ-ஷாடோ பவுடரை போட வேண்டாம், இதனால் இமைகள் சற்று களைந்தது போல் தோன்றி, அழகைக் கெடுக்கும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum