ஓய்வு எடுக்க மும்பை சென்றேன்: நடிகை அஞ்சலி பேட்டி
Page 1 of 1
ஓய்வு எடுக்க மும்பை சென்றேன்: நடிகை அஞ்சலி பேட்டி
நடிகை அஞ்சலி ஐதராபாத் ஓட்டலில் இருந்து கடந்த 8-ந்தேதி மாயமானார். சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தியதால் வெளியேறியதாக நிருபர்களை தொடர்பு கொண்டு பேட்டி அளித்தார். இதையடுத்து அஞ்சலியை கண்டுபிடிக்கும்படி போலீசில் வழக்குகள் பதிவாகின. அஞ்சலியின் சகோதரர் ரவிசங்கர் ஐதராபாத் போலீசில் அஞ்சலியை கண்டுபிடிக்கும்படி மனு கொடுத்தார்.
அஞ்சலியின் சித்தி பாரதிதேவியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அஞ்சலி கடத்தப்பட்டு உள்ளதாக புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் கேபியஸ் கார்பஸ் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சென்னை, ஐதராபாத் போலீசார் அஞ்சலியை தீவிரமாக தேட தொடங்கினர். இதனால் போலீசில் நேற்று இரவு அஞ்சலி சரண் அடைந்தார்.
ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் இருந்து இன்னோவா காரில் துணை போலீஸ் கமிஷனர் கதிர்பாபு அலுவலகத்துக்கு இரவு 10.45 மணிக்கு வந்தார். கார் பின்னால் சூட்கேஸ் டேப்டாப் கைப்பை போன்றவை இருந்தன. அஞ்சலியுடன் இளைஞர் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். கமிஷனர் அலுவலகத்தில் காரில் இருந்து இறங்கியதும் வேகமாக உள்ளே சென்றார். இந்த 5 நாட்களும் பத்திரிகை மற்றும் மீடியாக்கள் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தன. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எங்கேயும் ஓடிப் போகவில்லை. காணாமலும் போகவில்லை. மும்பையில் இருந்தேன். எனக்கு மிகுந்த மன அழுத்தம் இருந்தது. அதனால் ஓய்வு எடுப்பதற்காக தலை மறைவாக இருந்தேன். இந்தி போல்பச்சன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அந்த படத்தில் நான் நடிக்கிறேன். படப்பிடிப்பு நாளை நடக்கிறது. அதில் நான் கலந்து கொள்கிறேன்.
எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. மேற்கொண்டு எதையும் பேச முடியவில்லை. எல்லா விவரங்களையும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு மூலமாக தெரிவித்து விட்டேன். விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமாக பேசுகிறேன்.
இவ்வாறு கூறி விட்டு காரில் ஏறினார்.
சித்தி, சித்தப்பா கொடுமையால் தான் வீட்டை விட்டு வெளியேறினீர்களா? என்று கேட்டபோது அதுபற்றி யெல்லாம் அப்புறம் சொல்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார். பின்னர் போலீஸ் அதிகாரி சுதிர்பாபு கூறும் போது, அஞ்சலியை காணவில்லை என்று அவரது சகோதரர் புகார் அளித்து இருந்தார். அதன் மீது விசாரணை நடந்தது. அஞ்சலி நேரில் ஆஜராகி காணாமல் போகவில்லை என்று விளக்கம் அளித்தார்.
மும்பையில் இருந்ததாக தெரிவித்தார் என்றார். அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணங்கள் பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு ரகசியங்களையும் தெரிவித்து உள்ளாராம். இதன் மீது அடுத்த கட்ட அதிரடி விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலியின் சித்தி பாரதிதேவியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அஞ்சலி கடத்தப்பட்டு உள்ளதாக புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் கேபியஸ் கார்பஸ் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சென்னை, ஐதராபாத் போலீசார் அஞ்சலியை தீவிரமாக தேட தொடங்கினர். இதனால் போலீசில் நேற்று இரவு அஞ்சலி சரண் அடைந்தார்.
ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் இருந்து இன்னோவா காரில் துணை போலீஸ் கமிஷனர் கதிர்பாபு அலுவலகத்துக்கு இரவு 10.45 மணிக்கு வந்தார். கார் பின்னால் சூட்கேஸ் டேப்டாப் கைப்பை போன்றவை இருந்தன. அஞ்சலியுடன் இளைஞர் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். கமிஷனர் அலுவலகத்தில் காரில் இருந்து இறங்கியதும் வேகமாக உள்ளே சென்றார். இந்த 5 நாட்களும் பத்திரிகை மற்றும் மீடியாக்கள் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தன. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எங்கேயும் ஓடிப் போகவில்லை. காணாமலும் போகவில்லை. மும்பையில் இருந்தேன். எனக்கு மிகுந்த மன அழுத்தம் இருந்தது. அதனால் ஓய்வு எடுப்பதற்காக தலை மறைவாக இருந்தேன். இந்தி போல்பச்சன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அந்த படத்தில் நான் நடிக்கிறேன். படப்பிடிப்பு நாளை நடக்கிறது. அதில் நான் கலந்து கொள்கிறேன்.
எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. மேற்கொண்டு எதையும் பேச முடியவில்லை. எல்லா விவரங்களையும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு மூலமாக தெரிவித்து விட்டேன். விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமாக பேசுகிறேன்.
இவ்வாறு கூறி விட்டு காரில் ஏறினார்.
சித்தி, சித்தப்பா கொடுமையால் தான் வீட்டை விட்டு வெளியேறினீர்களா? என்று கேட்டபோது அதுபற்றி யெல்லாம் அப்புறம் சொல்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார். பின்னர் போலீஸ் அதிகாரி சுதிர்பாபு கூறும் போது, அஞ்சலியை காணவில்லை என்று அவரது சகோதரர் புகார் அளித்து இருந்தார். அதன் மீது விசாரணை நடந்தது. அஞ்சலி நேரில் ஆஜராகி காணாமல் போகவில்லை என்று விளக்கம் அளித்தார்.
மும்பையில் இருந்ததாக தெரிவித்தார் என்றார். அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணங்கள் பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு ரகசியங்களையும் தெரிவித்து உள்ளாராம். இதன் மீது அடுத்த கட்ட அதிரடி விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் சொந்த வாழ்க்கையை நானே முடிவு செய்வேன்: நடிகை அஞ்சலி பேட்டி
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி.
» 1993 மும்பை குண்டு வெடிப்பு: நான் சரணடைய போகிறேன் - சஞ்சய் தத் பேட்டி
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி.
» 1993 மும்பை குண்டு வெடிப்பு: நான் சரணடைய போகிறேன் - சஞ்சய் தத் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum