தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது

Go down

விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது Empty விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது

Post  ishwarya Thu May 02, 2013 6:22 pm

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த 25-ந் தேதி பா.ம.க.வினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பஸ்கள் எரிக்கப்பட்டன. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
கலவரத்தையொட்டி 2 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்திற்கு நீதிகோரி விழுப்புரத்தில் இன்று தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். போலீசாரிடம் பா.ம.க.வினர் அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் பா.ம.க.வின் போராட்டத்துக்கு நேற்று இரவு போலீசார் திடீரென்று தடை விதித்தனர்.

இதையடுத்து விழுப்புரம் ரெயில்வே நிலையம் அருகே தடையை மீறி பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்தனர். கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்தனர். போராட்டத்தையொட்டி விழுப்புரம், கடலூர் திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த 1000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த விழுப்புரத்திற்குள் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் நுழையாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட், கோலியனூர் கூட்டுரோடு 4 முனை சந்திப்பு, விழுப்புரம் மாம்பழபட்டு ரோடு, அரசூர், ஜானகிபுரம், முத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

பா.ம.க.வினர் உள்ளே நுழைந்தால் கைது செய்ய தயராக இருந்தனர். கைது செய்யப்படும் பா.ம.க.வினரை ஏற்றி செல்ல 10 அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கைதானவர்களை அமரவைக்க 20 திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காலை 11 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் வீட்டில் இருந்து டாக்டர் ராமதாஸ் காரில் விழுப்புரம் புறப்பட்டு சென்றார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ் உள்பட பலர் சென்றனர்.

விழுப்புரம் ரெயில்வே கேட் அருகே வந்தபோது ராமதாஸ் காரை போலீசார் வழிமறித்தனர். விழுப்புரம் நகருக்குள் சென்றார் கைது செய்வோம் என்று போலீசார் அவரிடம் கூறினர். ஆர்ப்பாட்டம் நடத்தியபின் கைது செய்யுங்கள் என்று போலீசாரிடம் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றார். ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ராமதாஸ் காரில் இருந்து இறங்கியதும் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ்செல்வன், கலிவரதன் மற்றும் நிர்வாகிகள் தங்கஜோதி, அன்பழகன், அன்புமணி, சிவக்குமார், மாவட்ட செயலாளர் பழனிவேலு உள்பட 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
»  விழுப்புரம் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது
» நெல்லையில் தடையை மீறி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum