தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரக்காணத்துக்குள் நுழைய வைகோவுக்கு தடை

Go down

மரக்காணத்துக்குள் நுழைய வைகோவுக்கு தடை Empty மரக்காணத்துக்குள் நுழைய வைகோவுக்கு தடை

Post  ishwarya Thu May 02, 2013 6:22 pm

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மரக்காணத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்தார். சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர் மரக்காணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

விழுப்புரம்-காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான தாழங்காடு என்ற இடத்தில் வந்தபோது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், கோட்டக்குப்பம் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் அவரை வழிமறித்தனர்.

மரக்காணம் கலவரப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அங்கு செல்லக்கூடாது என்று கூறினார்கள். இதைகேட்ட வைகோ போலீசார் என்னை அங்கு அனுமதிக்கவில்லை என்றால் நான் மரக்காணம் செல்ல விரும்பவில்லை. போலீஸ் உத்தரவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று கூறி அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

அப்போது வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தடையை மீறி மரக்காணம் பகுதிக்கு செல்ல விரும்பவில்லை. என்னால் இந்த பகுதிக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதை நான் விரும்புகிறேன். இந்த பகுதியில் அமைதி நிலவவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

ஈழபிரச்சினைக்காக லட்சபோ லட்சம் மாணவர்கள் எழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்த நேரத்தில் வடதமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் ஏற்பட்டிருப்பருப்பது வேதனை அளிக்கிறது. வடதமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும். ஜாதி மோதல்கள் களையப்பட வேண்டும். டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக இருந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum