தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?

Go down

சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்? Empty சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?

Post  ishwarya Thu May 02, 2013 5:30 pm

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி தயாரித்த அறிக்கையை மத்திய அரசு அதிகாரிகள் திருத்திய விவகாரம் சூடு பிடித்து வருகிறது. அந்த அறிக்கையில் திருத்தம் செய்தவர்கள் யார்-யார்? என்பதை 6-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ி.சபி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா புதிய அறிக்கையை தயார் செய்யும் பணியைத் தொடங்கி உள்ளார். அந்த அறிக்கையில் அவர் யார், யாரையெல்லாம் குறிப்பிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரஞ்சித் சின்கா சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், விசாரணை அறிக்கையை சட்ட மந்திரி அஸ்வினிகுமாரிடம் காட்டியதாக தெரிவித்தார்.

புதிய அறிக்கையிலும் அவர் இது பற்றி குறிப்பிடுவார் என்று தெரிகிறது. இதனால் சி.பி.ஐ. வரைவு அறிக்கையை பார்த்ததற்கும், திருத்தியதற்கும் மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் பொறுப்பு ஏற்க வேண்டியது வரும் என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அது மத்திய அரசுக்கும், மத்திய சட்ட மந்திரிக்கும் பெரும் நெருக்கடி கொடுப்பதாக இருக்கும். அந்த நெருக்கடியை தவிர்க்க சட்ட மந்திரி பதவியில் இருந்து அஸ்வினி குமாரை ராஜினாமா செய்ய வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அஸ்வினிகுமார் பதவி விலகுவதில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விருப்பம் இல்லை. எனவே இந்த நெருக்கடியை சமாளிப்பது பற்றி அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நிலக்கரி ஊழல் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது நீதிபதிகள் பரபரப்பு உத்தரவுகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை பொறுத்தே அஸ்வினிகுமார் பதவி தப்புமா? என்று தெரியவரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு
»  பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விவகாரம்: சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு நோட்டீசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
»  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரிக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» நிலக்கரி ஊழல் விவகாரம்: சட்ட மந்திரி அஸ்வனி குமாருடன் பிரதமர் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum