தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராமதாஸ் கைதால் போராட்டம்: கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் பஸ்கள் ஓடவில்லை

Go down

ராமதாஸ் கைதால் போராட்டம்: கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் பஸ்கள் ஓடவில்லை Empty ராமதாஸ் கைதால் போராட்டம்: கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் பஸ்கள் ஓடவில்லை

Post  ishwarya Thu May 02, 2013 2:39 pm

டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் கடலூர்- விழுப்புரம் மாவட்டங்களில் பஸ்கள் ஓடவில்லை. போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். டாக்டர் ராமதாசுடன் 509 பா.ம.க.வினரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் உடனடியாக அவரை விடுதலை செய்ய கோரி பல மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது அரசு பஸ்களுக்கு தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்களும் நடந்தது.

கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் 80 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று இரவு கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வெளியூர் புறப்பட்ட பயணிகள் பஸ் நிலையத்திலேயே பஸ்சுக்காக காத்து இருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி, உளுந்தூர்பேட்டை, சென்னை செல்லும் பஸ்கள் ஓடின. அதே வேளையில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் ஓடவில்லை. இன்றும் இதே நிலையே நீடிக்கிறது. புதுவையில் நேற்று காலை வழக்கம்போல் பஸ்கள்¢ஓடின. ஆனால், மாலை 6 மணிக்கு மேல் புதுவையில் இருந்து விழுப்புரம், கடலூர், திண்டிவனம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். மீண்டும் ஊர் திரும்ப முடியாமல் பஸ் நிலையத்திலேயே காத்து இருந்தனர். சிலர் ரெயில் மூலம் புதுவையில் இருந்து வெளியேறினர். இன்று காலையில் இருந்தே புதுவையில் குறைந்த பஸ்களே இயக்கப்பட்டது.

பெரும்பாலான தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் மட்டும் ஓடின. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர். பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் பதட்டம்: பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 1100 போலீசார்
» ராமதாஸ் கைதை கண்டித்து வன்முறை: 3 பஸ்கள் எரிப்பு, 100 பஸ்கள் சேதம்
»  டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» விழுப்புரம் கோர்ட்டில் ராமதாஸ் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
»  விழுப்புரம் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum