கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் பதட்டம்: பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 1100 போலீசார்
Page 1 of 1
கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் பதட்டம்: பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 1100 போலீசார்
மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ம.க.வினர் - அந்த பகுதியினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நீதி வழங்க கோரி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் திரளான பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் பஸ்கள் மீது கல்வீச்சு மற்றும் சாலை மறியல் நடந்தது.
இதுதொடர்பாக பா.ம.க.வினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு, சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களால் 2 மாவட்டங்களிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட பாதுகாப்பு பணிக்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சென்னை பட்டாலியன் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு காமினி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் விருதுநகர், மதுரையில் இருந்து 300 போலீசாரும், சிறப்பு காவல்படையை சேர்ந்த 200 போலீசாரும் கடலூர் வந்து சேர்ந்தனர். பண்ருட்டி, நெய்வேலி, சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு காமினி ஈடுபட்டுள்ளார். அதேபோல் கடலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்ட 500 போலீசாரும் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் விழுப்புரம் மாவட்ட பாதுகாப்புக்காக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஜாமுதீன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், கோவை 4-வது பட்டாலியன் போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.
மேலும் கோவையில் இருந்து பட்டாலியன் போலீசார் 673 பேர் விழுப்புரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளில் வஜ்ரா வாகனம் சகிதமாக ரோந்துவந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பா.ம.க.வினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு, சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களால் 2 மாவட்டங்களிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட பாதுகாப்பு பணிக்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சென்னை பட்டாலியன் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு காமினி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் விருதுநகர், மதுரையில் இருந்து 300 போலீசாரும், சிறப்பு காவல்படையை சேர்ந்த 200 போலீசாரும் கடலூர் வந்து சேர்ந்தனர். பண்ருட்டி, நெய்வேலி, சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு காமினி ஈடுபட்டுள்ளார். அதேபோல் கடலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்ட 500 போலீசாரும் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் விழுப்புரம் மாவட்ட பாதுகாப்புக்காக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஜாமுதீன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், கோவை 4-வது பட்டாலியன் போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.
மேலும் கோவையில் இருந்து பட்டாலியன் போலீசார் 673 பேர் விழுப்புரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளில் வஜ்ரா வாகனம் சகிதமாக ரோந்துவந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராமதாஸ் கைதால் போராட்டம்: கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் பஸ்கள் ஓடவில்லை
» விழுப்புரம் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது
» இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக
» பாலியல் வன்முறை: கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க முடிவு
» விமானப்படை பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இங்கிலாந்து இளவரசர்- சன்டே டைம்ஸ
» விழுப்புரம் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது
» இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக
» பாலியல் வன்முறை: கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க முடிவு
» விமானப்படை பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இங்கிலாந்து இளவரசர்- சன்டே டைம்ஸ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum