தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமாவாசையில் நள்ளிரவு வழிபாடு

Go down

அமாவாசையில் நள்ளிரவு வழிபாடு Empty அமாவாசையில் நள்ளிரவு வழிபாடு

Post  gandhimathi Mon Jan 21, 2013 5:53 pm

சென்னையில் சூளை என்ற பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் நடத்தப்படும் பூஜை சிறப்பானதாக கருதப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கானபேர் கலந்து கொள்கிறார்கள். அப்போது, இரவு 10.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யத் தொடங்குகிறார்கள்.

நள்ளிரவு 12 மணிக்குள் அலங்காரம் செய்து முடித்துவிடுகிறார்கள். அதன்பிறகு மகா ஜோதி ஏற்றி சிறப்பு ஆராதனை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது அம்மனின் கண்கள் சிவப்பாக மாறும் என்றும் சொல்கிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டால் பில்லி, சூனியம் போன்ற துர்தேவதைகளின் தாக்குதல் தீரும்.

குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணத்தடை அகலும் என்கிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் கோவிலிலேயே இரவு முழுவதும் தங்கிவிடுகிறார்கள். மறுநாள் காலையில் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum