தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் : நடிகர், நடிகையரின் சுதந்திர தின ஆசை!!

Go down

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் : நடிகர், நடிகையரின் சுதந்திர தின ஆசை!! Empty ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் : நடிகர், நடிகையரின் சுதந்திர தின ஆசை!!

Post  ishwarya Wed Apr 17, 2013 12:07 pm

நாட்டின் 65வது சுதந்திர தினத்தை‌யொட்டி, ஜனாதிபதி, பிரதமர், அந்ததந்த மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது சுதந்திர தின செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளனர். அதுபோல் தமிழ் சினிமா நடிகர், நடிகையரும் தங்களது சுதந்திர தின செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் நூறு சதவீதம் கல்வி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் படிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய சிலருக்கு உயர் கல்வி செலவையும் ஏற்றுள்ளேன். இதுதவிர கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளேன். அங்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

த்ரிஷா கூறுகையில், சுதந்திரம் எத்தனை அற்புதமான விஷயம் என்பது அனுபவிக்கும்போதுதான் புரிகிறது. நமது முன்னோர்களுக்கு நன்றி. நல்ல சிந்தனைகள் பெருக வேண்டும். அப்போதுதான் சமூகக் குற்றங்கள் குறையும், என்றார்.

அமலாபால் கூறுகையில், ஊழல் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. அரசியல் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு ஊழலும் மலிந்து இருக்கும். அவற்றை எதிர்க்க அன்னாஹசாரே போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். ஒவ்வொரு துறையிலும் இந்தியா ஒளிர்கிறது என்றார்.

அஜ்மல் கூறுகையில், ஊழல் ஒழிய வேண்டும். நிறைய வழக்குகள் ஊழலை மையப்படுத்தி நடக்கின்றன. இக்காலத்து இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக மாற வேண்டும். இந்தியாவுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.

தமன்னா கூறுகையில், என்னை இந்தியன் என் அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். நம்மை சுற்றி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. நிறைய வழக்குகளும் நடக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இதோடு நல்ல விஷயங்களும் நடக்கின்றன. அவைகளை நினைவில் கொள்வோம். ஊழல் அற்ற இந்தியா உருவாக இன்‌றைய இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், என்று நடிகர் சூர்யா கூறினார்.
»  வான்வெளி ஆய்வில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டும் : மாதவன் நாயர்
» ’ஃபோர்பஸ் இந்தியா’ இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடம்.
» ’ஃபோர்பஸ் இந்தியா’ இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடம்.
» நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: மதுரை கோர்ட்டு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum