மெரீனாவில் ஆறு மாதங்கள்… ’பசங்க’ உலகத்தில் பாண்டிராஜ்
Page 1 of 1
மெரீனாவில் ஆறு மாதங்கள்… ’பசங்க’ உலகத்தில் பாண்டிராஜ்
உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று மெரீனா. அதைவிட நீளமான கதைகள் இருக்கிறது அதற்குள்! ஒவ்வொரு சுண்டல் விற்கிற பையன்களிடமும் ஒரு கதை. கூட்டம் கூட்டமாக ஜோடிகள், கொஞ்சலும், கெஞ்சலுமான சம்பவங்கள். இவற்றையெல்லாம் கலந்து கட்டி மெரீனா என்ற பெயரிலேயே ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பசங்க பாண்டிராஜ். இன்னொரு ஆச்சர்யம். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரேதான்.
ஆரம்பத்தில் விமலையே நடிக்க வைக்கலாம்னு நினைச்சேன். அப்புறம் ரிப்பீட் வேணாமேன்னு யோசிச்சபோது தான் ஒரு நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயனை பார்த்தேன். நம்ம கதைக்கு இவரு பொறுத்தமா இருப்பார்னு தோணுச்சு. இதே எண்ணம் என்னுடைய அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கும் இருந்திச்சு. சும்மாவே நிறைய பேசுவார் அவர். இந்த படத்தில் நிறைய ஜோக்கடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியா ஓவியா நடிச்சிருக்காங்க. அப்புறம் என்னோட ஃபேவரைட் பையன் பக்கோடா பாண்டி. சின்ன வயசிலேயே அவனுக்குள்ளே இவ்வளவு ஆற்றலான்னு என்னை வியக்க வைக்கிறவன். பசங்க படத்தில் அவனுக்கும் தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். ஆனால் இல்லை. இந்த படத்தில் அதை ஈசியா அடைவான் அவன்.
மெரீனாவை சுற்றி ஆயிரம் சோகங்கள், இருட்டு உலகங்கள் என்று இருந்தாலும், நான காட்டியிருப்பது ரொம்ப ஜாலியான மெரீனாவை மட்டும்தான். சிரிக்கணும், அப்படியே சில காட்சிகளில் ஸ்டன் ஆகணும். லேசா ஈரம் கசியணும். அதை மட்டும்தான் நினைச்சு எடுத்திருக்கேன்.
ஆனால் இந்த மெரீனா கதைக்காக நான் ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்ச அந்த ஆறு மாசத்தில் எத்தனையோ சம்பவங்களை சந்திச்சேன். அதையெல்லாம் சொன்னா நம்ம கைக்கு எட்டுற துரத்தில் இப்படியொரு ஏரியாவா என்று அதிர்ந்து போவார்கள் மக்கள். இருந்தாலும் நான் அந்த பக்கம் போகாததற்கு காரணம், பாண்டிராஜ் படம்னா குடும்பத்தோடு வந்தோம். ரசிச்சோம்னு இருக்கணும் என்பதற்காகதான் என்று பேசிக் கொண்டே போன பாண்டிராஜிடம், அதென்ன எப்பவும் பசங்க பற்றிய கதையையே எடுத்துகிட்டு இருக்கீங்க என்றோம்.
இது மட்டுமல்ல சார். இன்னும் கூட நாலைஞ்சு கதை வச்சுருக்கேன். அவங்க உலகம் தனியானது. சொல்வதற்கு வற்றிப் போகாத உலகம் அது. என்னவோ தெரியல, அப்பவும் சரி, இப்பவும் சரி, குழந்தைகள் உலகத்தில் நானும் சீக்கிரம் மிங்கிள் ஆகுற ஆள்தான். என்னிடமிருந்து இதுபோன்ற கதைகள் வருவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றார்.
இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு அவர் செய்ய நினைத்திருக்கும் காரியங்களில் ரொம்ப முக்கியமானது இது. அப்பா அம்மா வாங்கின ஐயாயிரம் ரூபா கடனுக்காக கிட்டதட்ட கொத்தடிமை மாதிரி வாழ்ந்திட்டு இருக்கிற இவர்களில் பலரை அந்த பணத்தை கொடுத்து மீட்கணும். மறுபடியும் அந்த குழந்தைகள் பெற்றவர்களிடம் சேர்ந்தால் அதுதான் இந்த படத்தின் வெற்றி கொடுக்கிற சந்தோஷத்தைவிட எனக்கு பெருசு என்றார்.
ஆமென்…
ஆரம்பத்தில் விமலையே நடிக்க வைக்கலாம்னு நினைச்சேன். அப்புறம் ரிப்பீட் வேணாமேன்னு யோசிச்சபோது தான் ஒரு நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயனை பார்த்தேன். நம்ம கதைக்கு இவரு பொறுத்தமா இருப்பார்னு தோணுச்சு. இதே எண்ணம் என்னுடைய அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கும் இருந்திச்சு. சும்மாவே நிறைய பேசுவார் அவர். இந்த படத்தில் நிறைய ஜோக்கடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியா ஓவியா நடிச்சிருக்காங்க. அப்புறம் என்னோட ஃபேவரைட் பையன் பக்கோடா பாண்டி. சின்ன வயசிலேயே அவனுக்குள்ளே இவ்வளவு ஆற்றலான்னு என்னை வியக்க வைக்கிறவன். பசங்க படத்தில் அவனுக்கும் தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். ஆனால் இல்லை. இந்த படத்தில் அதை ஈசியா அடைவான் அவன்.
மெரீனாவை சுற்றி ஆயிரம் சோகங்கள், இருட்டு உலகங்கள் என்று இருந்தாலும், நான காட்டியிருப்பது ரொம்ப ஜாலியான மெரீனாவை மட்டும்தான். சிரிக்கணும், அப்படியே சில காட்சிகளில் ஸ்டன் ஆகணும். லேசா ஈரம் கசியணும். அதை மட்டும்தான் நினைச்சு எடுத்திருக்கேன்.
ஆனால் இந்த மெரீனா கதைக்காக நான் ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்ச அந்த ஆறு மாசத்தில் எத்தனையோ சம்பவங்களை சந்திச்சேன். அதையெல்லாம் சொன்னா நம்ம கைக்கு எட்டுற துரத்தில் இப்படியொரு ஏரியாவா என்று அதிர்ந்து போவார்கள் மக்கள். இருந்தாலும் நான் அந்த பக்கம் போகாததற்கு காரணம், பாண்டிராஜ் படம்னா குடும்பத்தோடு வந்தோம். ரசிச்சோம்னு இருக்கணும் என்பதற்காகதான் என்று பேசிக் கொண்டே போன பாண்டிராஜிடம், அதென்ன எப்பவும் பசங்க பற்றிய கதையையே எடுத்துகிட்டு இருக்கீங்க என்றோம்.
இது மட்டுமல்ல சார். இன்னும் கூட நாலைஞ்சு கதை வச்சுருக்கேன். அவங்க உலகம் தனியானது. சொல்வதற்கு வற்றிப் போகாத உலகம் அது. என்னவோ தெரியல, அப்பவும் சரி, இப்பவும் சரி, குழந்தைகள் உலகத்தில் நானும் சீக்கிரம் மிங்கிள் ஆகுற ஆள்தான். என்னிடமிருந்து இதுபோன்ற கதைகள் வருவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றார்.
இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு அவர் செய்ய நினைத்திருக்கும் காரியங்களில் ரொம்ப முக்கியமானது இது. அப்பா அம்மா வாங்கின ஐயாயிரம் ரூபா கடனுக்காக கிட்டதட்ட கொத்தடிமை மாதிரி வாழ்ந்திட்டு இருக்கிற இவர்களில் பலரை அந்த பணத்தை கொடுத்து மீட்கணும். மறுபடியும் அந்த குழந்தைகள் பெற்றவர்களிடம் சேர்ந்தால் அதுதான் இந்த படத்தின் வெற்றி கொடுக்கிற சந்தோஷத்தைவிட எனக்கு பெருசு என்றார்.
ஆமென்…
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மெரீனாவில் ஆறு மாதங்கள்… ’பசங்க’ உலகத்தில் பாண்டிராஜ்
» அஜித்துக்கு ஆபரேஷன் : 4 மாதங்கள் கட்டாய ஓய்வு.
» இரண்டு மாதங்கள் ஓய்வு… ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?
» ‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்
» உழைப்புக்கு கிடைத்த பலன் : டைரக்டர் பாண்டிராஜ் பெருமிதம்
» அஜித்துக்கு ஆபரேஷன் : 4 மாதங்கள் கட்டாய ஓய்வு.
» இரண்டு மாதங்கள் ஓய்வு… ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?
» ‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்
» உழைப்புக்கு கிடைத்த பலன் : டைரக்டர் பாண்டிராஜ் பெருமிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum