அஜித்துக்கு ஆபரேஷன் : 4 மாதங்கள் கட்டாய ஓய்வு.
Page 1 of 1
அஜித்துக்கு ஆபரேஷன் : 4 மாதங்கள் கட்டாய ஓய்வு.
இரு புதிய படங்களில் நடித்து முடித்ததும் நடிகர் அஜித்குமார் காலில், அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. சிகிச்சைக்குப்பின் அவர் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க இருப்பதால், புதிய பட வாய்ப்புகள் எதையும் அவர் தற்போது ஏற்றுக் கொள்ளவில்லை. அஜித்குமார் இப்போது, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
அஜீத்-நயன்தாராவுடன் ஆர்யா, டாப்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த திரையுலகமும் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் அஜித்தும், நயன்தாராவும் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர் விஷ்ணுவர்தன் படத்திற்காக. யார் கண் அஜீத் மீது பட்டதோ தெரியவில்லை, கலர் பொடி கண்ணில் பட்டதால், அஜித்திற்கு கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டது.
அஜித் வில்லன் ஆட்களுடன் மோதுகிற ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் இருந்து இன்னொரு கார் மீது அஜித் குதிப்பது போன்ற காட்சியில், ‘டூப்´ போடாமல் அவரே நடித்தார். அப்போது, அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது.
உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்துக்கு, காலில் கட்டுப்போட்டு வைத்தியர்கள் சிகிச்சை அளித்தார்கள். காலில் உள்ள வலியை பொறுத்துக்கொண்டு அஜித் தொடர்ந்து அந்த படத்தில் நடித்தார். அதற்காக வலி நிவாரண மாத்திரை - மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
காலில் அவருக்கு நாளுக்கு நாள் வலி அதிகமாக அஜித் மீண்டும் வைத்தியரிடம் சென்று பரிசோதித்தார். அறுவை சிகிச்சை செய்தால்தான் வலி குறையும்´´ என்று சொன்னார்களாம் அவர்கள்.
இதன்படி ஆபரேஷனுக்குப்பின் குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் சொல்லி இருக்காங்களாம்.
உடனடியாக ‘ஆபரேஷன்´ செய்து கொண்டால், பட அதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், 2 படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தபின், ‘ஆபரேஷன்´ செய்து கொள்ள அஜித் முடிவு செய்திருக்கிறார்.
அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஏ.எம்.ரத்னம் படம் மே மாதம் முடிவடைந்து விடும். அதற்கிடையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) அவர் நடிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் படம் தொடங்க இருக்கிறது.
அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடிவடையும்.அக்டோபர் 21-ம் திகதி, அஜித் ‘ஆபரேஷன்´ செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார். அதன்பிறகு அஜித் 4 மாதங்கள் ஓய்வு எடுக்கிறார். இதனால் அவர் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அஜீத்-நயன்தாராவுடன் ஆர்யா, டாப்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த திரையுலகமும் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் அஜித்தும், நயன்தாராவும் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர் விஷ்ணுவர்தன் படத்திற்காக. யார் கண் அஜீத் மீது பட்டதோ தெரியவில்லை, கலர் பொடி கண்ணில் பட்டதால், அஜித்திற்கு கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டது.
அஜித் வில்லன் ஆட்களுடன் மோதுகிற ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் இருந்து இன்னொரு கார் மீது அஜித் குதிப்பது போன்ற காட்சியில், ‘டூப்´ போடாமல் அவரே நடித்தார். அப்போது, அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது.
உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்துக்கு, காலில் கட்டுப்போட்டு வைத்தியர்கள் சிகிச்சை அளித்தார்கள். காலில் உள்ள வலியை பொறுத்துக்கொண்டு அஜித் தொடர்ந்து அந்த படத்தில் நடித்தார். அதற்காக வலி நிவாரண மாத்திரை - மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
காலில் அவருக்கு நாளுக்கு நாள் வலி அதிகமாக அஜித் மீண்டும் வைத்தியரிடம் சென்று பரிசோதித்தார். அறுவை சிகிச்சை செய்தால்தான் வலி குறையும்´´ என்று சொன்னார்களாம் அவர்கள்.
இதன்படி ஆபரேஷனுக்குப்பின் குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் சொல்லி இருக்காங்களாம்.
உடனடியாக ‘ஆபரேஷன்´ செய்து கொண்டால், பட அதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், 2 படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தபின், ‘ஆபரேஷன்´ செய்து கொள்ள அஜித் முடிவு செய்திருக்கிறார்.
அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஏ.எம்.ரத்னம் படம் மே மாதம் முடிவடைந்து விடும். அதற்கிடையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) அவர் நடிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் படம் தொடங்க இருக்கிறது.
அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடிவடையும்.அக்டோபர் 21-ம் திகதி, அஜித் ‘ஆபரேஷன்´ செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார். அதன்பிறகு அஜித் 4 மாதங்கள் ஓய்வு எடுக்கிறார். இதனால் அவர் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரண்டு மாதங்கள் ஓய்வு… ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?
» அஜித்துக்கு வில்லனாகிறார் ஆர்யா?!
» விஜய்க்கு மும்பை, அஜித்துக்கு சென்னை
» மெரீனாவில் ஆறு மாதங்கள்… ’பசங்க’ உலகத்தில் பாண்டிராஜ்
» மெரீனாவில் ஆறு மாதங்கள்… ’பசங்க’ உலகத்தில் பாண்டிராஜ்
» அஜித்துக்கு வில்லனாகிறார் ஆர்யா?!
» விஜய்க்கு மும்பை, அஜித்துக்கு சென்னை
» மெரீனாவில் ஆறு மாதங்கள்… ’பசங்க’ உலகத்தில் பாண்டிராஜ்
» மெரீனாவில் ஆறு மாதங்கள்… ’பசங்க’ உலகத்தில் பாண்டிராஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum