தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழிபாட்டுக்கு உகந்த நேரம்

Go down

வழிபாட்டுக்கு உகந்த நேரம் Empty வழிபாட்டுக்கு உகந்த நேரம்

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:54 pm

ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். வாகனத்தை இயக்கும் போது கூட, ராகு கால, எமகண்ட நேரங்களில் அசுரத் தனமாக வண்டியை இயக்குவோம்.

சந்து பொந்துக்கு செல்வது போன்றவை நேரிடும். கட்டுப்பாட்டை மீறி செயல்பட தூண்டும் நேரங்கள் அவை. அதனால் தான் அந்த நேரங்களில் பொறுமையாக செய்வது நல்லது. அமைதியாக இருப்பது நல்லது என்று கூறுவார்கள்.

வழக்கமான பணிகளை நாம் அந்த நேரங்களில் தொடரலாம். ஆனால் எந்த புதிய வேலையையும் அந்த நேரத்தில் தொடங்குவது நல்லதல்ல. ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை? கேது காலத்தை தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது காலம் என்பது இல்லை என்று சொல்லக்கூடாது. அதனைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம்.

ராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும். ராகு காலம் 1 மணி 30 நிமிடமாகும்.

ஞாயிறு 4.30-6.00,
திங்கள் 7.30-9.00,
செவ்வாய் 3.00-4.30,
புதன் 12.00-1.30,
வியாழன் 1.30-3.00,
வெள்ளி 10.30-12.00,
சனி 9.00-10.30
-ஆகும்.

ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2-ம் அரை மணி நேரம் உடல் பாகம், 3-ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம் தான் அமிர்த கடிகை எனும் விசேஷ காலமாகும்.

இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum