நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது
Page 1 of 1
நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது
நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பியும், நடிகரும், முன்னாள் திமுக அமைச்சர் சுப, தங்கவேலனின் பேரனுமான ரிதீஷ்குமார் இன்று கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிதீஷ்குமார். சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாத்தா சுப.தங்கவேலன் திமுக அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில் இன்று காலை ரிதீஷ் குமாரை போலீஸார் நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தனக்குச் சொந்தமான 1.47 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரிதீஷ்குமார் பறித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத் தருமாறும் அவர் கோரியிருந்தார்.
இதன் பேரில்வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரிதீஷ் குமாரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது யாரும் எதிர்பாராத வகையில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டு அரசியலில் நுழைக்கப்பட்டார் ரிதீஷ்குமார்.இதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மேலிடத்தில் தனது தாத்தாவுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.பியானார் ரிதீஷ்குமார்.
திரைத் துறையிலும் கூட சில காலம் இவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. தனது முதல் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்காக பிரியாணியும், கையில் காசும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரிதீஷ்குமார் என்பது நினைவிருக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு மோதல்களில் ஈடுபட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் ரிதீஷ் குமார்.இதுதொடர்பாக சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
நேற்றுதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார் ரிதீஷ். இந்த நிலையில் இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திமுகவினர் ஆவர். பல முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியே உள்ளனர், பலர் உள்ளேயே இருக்கின்றனர்.
இந்த நிலையில் எம்.பி. ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிதீஷ்குமார். சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாத்தா சுப.தங்கவேலன் திமுக அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில் இன்று காலை ரிதீஷ் குமாரை போலீஸார் நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தனக்குச் சொந்தமான 1.47 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரிதீஷ்குமார் பறித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத் தருமாறும் அவர் கோரியிருந்தார்.
இதன் பேரில்வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரிதீஷ் குமாரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது யாரும் எதிர்பாராத வகையில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டு அரசியலில் நுழைக்கப்பட்டார் ரிதீஷ்குமார்.இதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மேலிடத்தில் தனது தாத்தாவுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.பியானார் ரிதீஷ்குமார்.
திரைத் துறையிலும் கூட சில காலம் இவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. தனது முதல் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்காக பிரியாணியும், கையில் காசும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரிதீஷ்குமார் என்பது நினைவிருக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு மோதல்களில் ஈடுபட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் ரிதீஷ் குமார்.இதுதொடர்பாக சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
நேற்றுதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார் ரிதீஷ். இந்த நிலையில் இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திமுகவினர் ஆவர். பல முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியே உள்ளனர், பலர் உள்ளேயே இருக்கின்றனர்.
இந்த நிலையில் எம்.பி. ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது
» மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!
» விபச்சார வழக்கில் என்னை கைது செய்ய முயற்சி! – வனிதா புதிய புகார்
» நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்
» மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!
» விபச்சார வழக்கில் என்னை கைது செய்ய முயற்சி! – வனிதா புதிய புகார்
» நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum