தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Go down

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு Empty தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Post  amma Thu Apr 04, 2013 6:26 pm



தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தேர்தல் நடத்த கடந்த 4–ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த தேர்தல் நாளை (5–ந் தேதி) தொடங்கி 27–ந் தேதி வரை 4 கட்டமாகவும், பின்னர் 5–வது கட்டமாக தமிழ் நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கும் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ஐகோர்ட்டு மறுப்பு

இந்த தேர்தலில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தேர்தல் கமிஷனருக்கு உத்தரவிட கோரியும், தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் அகர்வால், நீதிபதி பால்வசந்த குமார் ஆகியோர், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு அதில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இதேபோல், பெண்களுக்கும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் உரிய இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட இன்னொரு வழக்கையும் ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் அகர்வால், நீதிபதி பால்வசந்த குமார் ஆகியோர் விசாரித்தனர். இட ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்த கூட்டுறவு சங்க தேர்தலின்போது முதன்மைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

இதற்கிடையே என்.ஆர்.கே.சர்க்கரை ஆலையும், பரமசிவம் என்பவரும் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் நிஜார் மற்றும் கோஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 5–ந் தேதி கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர். இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?
»  நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
»  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரிக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ‘‘குட்கா தடை அமல் பற்றி விளக்கம் அளியுங்கள்’’
»  பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விவகாரம்: சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு நோட்டீசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum