தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழக, புதுவை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Go down

தமிழக, புதுவை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு  Empty தமிழக, புதுவை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Post  amma Thu Apr 04, 2013 5:42 pm



தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் ராமேசுவரம், கோடியக்கரை, புதுப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர். மீனவர்களின் படகுகளை மறித்து துப்பாக்கியால் சுட்டு விரட்டுதல், அடித்து உதைத்தல், மீன் வலைகளை அறுத்தல், அவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்களையும், இதர பொருள்களையும் கொள்ளையடித்தல் போன்ற அட்டூழியங்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.இவை தவிர, பல சமயங்களில் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளுடன் பிடித்துச் சென்று இலங்கை சிறையில் அடைக்கும் கொடுமையையும் செய்து வருகின்றனர். தமிழக மற்றும் மத்திய அரசு இதற்கு கண்டனம் தெரிவித்தும் அவர்களின் அட்டூழியம் நின்றபாடில்லை. தொடர்கதையாக நடந்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் ராமன், பொன்னுசாமி, ராஜா ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

கேரளா அரசு போல

கடந்த ஆண்டு கேரளாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 2 மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டு கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர்கள் மீது கேரள அரசு குற்றவியல் நடவடிக்கை எடுத்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மத்திய அரசும், இந்த விவகாரத்தில் கேரள அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது.இதேபோல், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதற்கும் முடிவு கட்ட வேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், இலங்கை அரசு மீது மத்திய அரசும், தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகளும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
»  சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராம கோபாலன் கோரிக்கை
»  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை – சின்மயி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum