தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வன்முறையை தூண்டும் பாடல்…! கொலவெறிக்கு எதிராக கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்!

Go down

வன்முறையை தூண்டும் பாடல்…! கொலவெறிக்கு எதிராக கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்! Empty வன்முறையை தூண்டும் பாடல்…! கொலவெறிக்கு எதிராக கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்!

Post  ishwarya Thu Apr 04, 2013 5:41 pm

குழந்தைகளையும், இளைஞர்களையும் வன்முறைக்கு தூண்டும் பாடலாக கொலவெறி பாடல் இருப்பதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 3. இப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல், படம் வெளிவருதற்கு முன்பே உலகம் முழுக்க ரொம்ப பாப்புலரானது. இந்த பாட்டிற்கு பிறகு தனுஷ் உச்ச நிலைக்கு சென்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்பாடல் வெளியான போதே சமூக ஆர்வலர்கள் உள்ளி்ட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கேரளா, இடுக்கி மாவட்டம், பீர்மேடு பகுதியை சேர்ந்த அஞ்சல் துறையில் பணியாற்றி வரும் மாடசாமி(இவர் 30 மணி நேரம் 6நிமிடங்கள் மேடையில் பேசி கின்னஸ் சாதனை படைத்தவர்)என்பவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஒய் திஸ் கொலவெறி பாடல், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையிலான பாடல்கள் பட்டியலில் கொலவெறி பாடல் இடம்பெற்று இருக்கிறது. இதுபோன்ற பாடல்கள் இளைஞர்களை தீய வழியில் திருப்பி விடும். அத்துடன் பெண்களை ஈவ் டீசிங் செய்வதற்கும் இந்த பாடலை இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் இந்த பாடலைப்பாடி வருவதால் அவர்கள் வன்முறைக்கு தூண்டப்படலாம் என்று, சில பள்ளிகள் கவலை தெரிவித்து உள்ளன. எனவே `3 படத்தில் இருந்து இந்த பாடலை தடை செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற பாடல்களுக்கு தணிக்கை குழு எவ்வாறு அனுமதி அளித்தது என்பது குறித்தும் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாடசாமி மனு மீதான விசாரணை நீதிபதி ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசா‌ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலத்திற்கு தள்ளி வைத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum