தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சொந்தமாக படம் தயாரிக்கிறார்

Go down

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சொந்தமாக படம் தயாரிக்கிறார் Empty ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சொந்தமாக படம் தயாரிக்கிறார்

Post  ishwarya Tue Apr 02, 2013 1:49 pm

இந்திய சினிமாவின் பிரபல ஒலிப்பதிவாளர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. இவர் ஸ்லெம் டாக் மில்லினர் என்ற படத்துக்கு சிறந்து ஒலிப்பதிவு செய்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.அதன் பின்பு பழசிராஜா என்ற மலையாள படம் மற்றும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் ஆகிய படங்களுக்கும் ஒலிப்பதிவு செய்தார்.

மலையாள பட உலகில் முன்னணி ஒலிப்பதிவாளராக திகழும் ரசூல் பூக்குட்டி தற்போது சொந்தமாக மலையாள படம் தயாரிக்கிறார். “ஐடி” என்ற பெயரில் தயாராகும் இப்படத்தில் பூனே பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முடித்தவர்கள் நடிக்கிறார்கள்.

இன்றைய இளைஞர் சமுதாயம் சுய முகவரி இன்றி சூழ்நிலைகளுக்கேற்ப தடுமாறி கொண்டு இருக்கிறது. அவர்களின் சரியான தடம் எது என்பதை காட்டும் விதமாக ஐடி படம் அமையும்.

காலத்துக்கேற்ற கதையை கேட்டதும் எனக்கு பிடித்துப் போனது. எனவே நானே ஐடி படத்தை தயாரிக்க எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum