தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சயீப்- கரீனா ஜோடிக்கு திருமணப் பரிசாக சாக்லெட் கோழிகள்: பீட்டா அமைப்பு வழங்கியது

Go down

சயீப்- கரீனா ஜோடிக்கு திருமணப் பரிசாக சாக்லெட் கோழிகள்: பீட்டா அமைப்பு வழங்கியது Empty சயீப்- கரீனா ஜோடிக்கு திருமணப் பரிசாக சாக்லெட் கோழிகள்: பீட்டா அமைப்பு வழங்கியது

Post  ishwarya Sat Mar 30, 2013 4:40 pm

கடந்த 2007-ம் ஆண்டு முதல் காதலித்து வந்த நட்சத்திர ஜோடியான கரீனாகபூர்- சயீப் அலிகான் இன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். மும்பை பந்த்ராவில் உள்ள சயீப் அலிகானின் பரம்பரை இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

கரீனா கபூர் சைவம் மட்டுமே சாப்பிடுவார். இதனால் விலங்குகள் வதை தடுப்பு இயக்கமான பீட்டா சார்பில் மிகப்பெரிய 5 சாக்லெட் கோழிகள் பரிசளிக்கப்பட்டது. இந்த சாக்லெட்டுகள் டெல்லியில் உள்ள சாக்கோ கிராப்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை.

சைவப் பிரியரான கரீனா கபூர், ஒரு படத்தில் நடிப்புக்காக முட்டை சாப்பிடும்படி கூறியபோதும் அதனை மறுத்துவிட்டார். இதனால் அவரது திருமண வாழ்க்கை இனிப்பாக தொடங்க வேண்டும் என்பதற்காக சாக்லெட் கோழிகளை பரிசாக கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு இந்த திருமணத்தைவிட சிறந்த நிகழ்ச்சி இல்லை என்றும் பீட்டா தலைமை அதிகாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (18-ந்தேதி) மும்பையில் நடக்கிறது. இதில் அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களும் கலந்துகொண்டு வாழ்த்துகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum