தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கடல்’ பட ஜோடிகளை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னம்: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

Go down

‘கடல்’ பட ஜோடிகளை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னம்: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம் Empty ‘கடல்’ பட ஜோடிகளை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னம்: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

Post  ishwarya Fri Mar 29, 2013 11:36 am

மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தில் பழைய நட்சத்திர ஜோடிகளான கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும் ராதா மகள் துளசி நாயகியாகவும் நடிக்கின்றனர். கார்த்திக்கும் ராதாவும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ஒன்றாக அறிமுகமானவர்கள்.

கவுதம், துளசி படங்களை வெளியிடாமல் மணிரத்னம் ரகசியமாக வைத்திருந்தார். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் முகத்தை பார்க்க தமிழ் ரசிகள் ஆர்வமாக இருந்தனர்.

இந்த நிலையில் இருவரையும் ஐதராபாத்துக்கு அழைத்து போய் தெலுங்கு ரசிகர்கள் முன்னிலையில் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். இதற்காக அங்கு பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான தெலுங்கு ரசிகர்களும் ஆந்திர நடிகர், நடிகைகளும் திரண்டு இருந்தனர்.

ராதாவின் மகள் துளசி கையை பிடித்தபடி அர்ஜுன் மேடைக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார். அப்போது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். இதுபோல் கவுதமும் அறிமுகம் செய்யப்பட்டார். விழாவில் கார்த்திக்கும் ராதாவும் பங்கேற்று மேடை முன்னால் அருகருகே உட்கார்ந்து இருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு நடிகை சுகாசினி, போன்றோரும் கலந்து கொண்டார்கள்.

இருவரையும் ஆந்திராவுக்கு அழைத்து போய் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. பின்னர் ஐதராபாத்தில் மணிரத்னம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கார்த்திக், ராதாவின் மகன், மகளை கடல் படத்தில் நடிக்க வைத்தது எதிர்பாராமல் நடந்தது. நான் எந்த படமாக இருந்தாலும் கதைக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன். அதன் பிறகு கதைக்கு ஏற்ற கேரக்டர்களை தேடுவேன். கதைக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருப்பவர்களைத்தான் நடிக்க வைப்பேன். இந்த படத்திலும் அப்படித்தான் நடந்தது. கதைக்கு கவுதம், துளசி பொருத்தமாக இருந்தனர்.

இவ்வாறு மணிரத்னம் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum