தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டம்

Go down

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டம் Empty இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டம்

Post  meenu Thu Mar 28, 2013 2:31 pm

கடலூரில் நாளை (28-ந் தேதி) அனைத்து கட்சி சார்பில் பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. மேலும் காலை 9 மணி முதல் 6 மணி வரை கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும், தனி தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

இந்த பொது வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர்கட்சி, அனைத்து குடியிருப்போர் நல சங்கம், மீனவர் விடுதலை வேங்கைகள், அனைத்து ஆட்டோ, வேன், லாரி உரிமையாளர் சங்கத்தினர் கலந்து கொள்கிறார்கள்.

பொதுவேலை நிறுத்தம் குறித்து கடலூர் பகுதி முழுவதும் கடைகள், பொதுமக்கள், ஆட்டோ, லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆகியோர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், நகர செயலாளர் பாவாணன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கண்ணன், அருள்பாபு, செந்தில், தி.மு.க. கவுன்சிலர் நடராஜன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், ம.தி.மு.க. நகர செயலாளர் ராமசாமி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதின் உள்பட பல்வேறு கட்சி, அமைப்புளை சேர்ந்த நிர்வாகிகள் இருந்தனர்.

முன்னதாக காலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம்
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்
» புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum