தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி

Go down

நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி Empty நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி

Post  ishwarya Wed Mar 27, 2013 11:51 am

நன்னிலம், மார்ச். 27-

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மனவாளம் பேட்டை மெயின் ரோட்டில் வசித்துவருபவர் ஏசு (வயது 50) இவர் தனது குடும்பத்தோடு இரவு சாப்பிட்டுவிட்டு துங்கிகொண்டு இருந்தார். வீட்டின் முன்பக்கத்தில் ஏசு, அவரது மகன் இளமாறன் (17) ஆகியோரும் வீட்டின் உள்ளே ஏசுவின் மனைவி மல்லிகா (45) மகள் இலக்கியா (19) ஆகிய 4 பேரும் துங்கிகொண்டிருந்தனர்.

அதிகாலை 3 மணி அளவில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து, நிலக்கரி ஏற்றிக்கொண்டு கும்பகோணம் வந்த லாரி எதிர்பாராத விதமாக ரோட்டு ஓரத்திலிருந்த வீட்டிற்குள் புகுந்தது இதில் ஏசு மற்றும் மகன் இளமாறன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மல்லிகா, மகள் இலக்கியா இருவரும் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளனர்.

இருவரும் தீவிர மருத்துவ சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்து போன இளமாறன் நன்னிலம் பாரதிதாசன் உறுப்புகல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். படுகாயம் அடைந்த இலக்கியா திரு.வி.கா. கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து சம்பவம் நன்னிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum