தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோவிலில் பரிகார பூஜை.....

Go down

கோவிலில் பரிகார பூஜை..... Empty கோவிலில் பரிகார பூஜை.....

Post  meenu Sun Mar 24, 2013 1:11 pm

அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும், உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும், பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும், இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை, நந்திக் கூட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலை களில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.

நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும், கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. கோவிலில் அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது.

அப்போது மூங்கில் தட்டில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச்சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம், சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

பிறகு பூஜை செய்யப்பட்ட அந்த தட்டினை வயதான ஒரு அந்தனரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடை தானமும் செய்கிறார்கள்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum