துப்பாக்கி பட வழக்கு: தீர்ப்பை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
Page 1 of 1
துப்பாக்கி பட வழக்கு: தீர்ப்பை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
துப்பாக்கி திரைப்படம் தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் தாமாகவே திரும்பப் பெற்றது.
துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதால், அந்தப் படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை திரும்பப் பெற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. அப்துல் ரஹீம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் இம்மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தனர். திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த ஒரு சான்றிதழ் சரியாக அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
ஆகவே, ஏற்கெனவே மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை மறு ஆய்வு மனுவாகக் கருதி, சட்டப்படி அதனைப் பரிசீலித்து மார்ச் 31-ம் தேதிக்குள் அந்த மனு தொடர்பான முடிவினை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்பினை திரும்பப் பெறுவதாக நீதிபதிகள் புதன்கிழமை அறிவித்தனர். திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது தொடர்பான விவகாரங்களில் மனுதாரர் போன்ற மூன்றாவது நபர்கள் சினிமடோகிராப் சட்டத்தின் பிரிவு 6(1)-ன் படி மத்திய அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
ஆனால், இந்தப் பிரிவு சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டதால், மனுதாரர் மேல்முறையீடு செய்வதற்கான மாற்று வழி என்ன என்பது குறித்து ஆராய்வதற்காக பிப்ரவரி 8-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்குள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தங்கள் தரப்பு கருத்துகளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதால், அந்தப் படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை திரும்பப் பெற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. அப்துல் ரஹீம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் இம்மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தனர். திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த ஒரு சான்றிதழ் சரியாக அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
ஆகவே, ஏற்கெனவே மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை மறு ஆய்வு மனுவாகக் கருதி, சட்டப்படி அதனைப் பரிசீலித்து மார்ச் 31-ம் தேதிக்குள் அந்த மனு தொடர்பான முடிவினை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்பினை திரும்பப் பெறுவதாக நீதிபதிகள் புதன்கிழமை அறிவித்தனர். திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது தொடர்பான விவகாரங்களில் மனுதாரர் போன்ற மூன்றாவது நபர்கள் சினிமடோகிராப் சட்டத்தின் பிரிவு 6(1)-ன் படி மத்திய அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
ஆனால், இந்தப் பிரிவு சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டதால், மனுதாரர் மேல்முறையீடு செய்வதற்கான மாற்று வழி என்ன என்பது குறித்து ஆராய்வதற்காக பிப்ரவரி 8-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்குள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தங்கள் தரப்பு கருத்துகளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» துப்பாக்கி பட விவகாரம்:மார்ச் 31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பிரசாந்த் – கிரகலட்சுமி திருமணமே செல்லாது! – உயர் நீதிமன்றம்
» வன யுத்தம் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் அனுமதி
» வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்
» பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: உயர் நீதிமன்றம்
» பிரசாந்த் – கிரகலட்சுமி திருமணமே செல்லாது! – உயர் நீதிமன்றம்
» வன யுத்தம் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் அனுமதி
» வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்
» பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: உயர் நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum